செய்திகள் :

ஐபிஎல்லின் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி! புதிய விதிகள் என்ன?

post image

ஐபிஎல்லில் 2-வது இன்னிங்ஸில் 2 பந்துகள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரில் தொடக்கப் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கும் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய விதிகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக கிரிக்கெட் பந்துகளில் எச்சில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி!

புதிய விதிகள்

அதுமட்டுமின்றி, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு பந்துகள் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதியின் படி 2-வது இன்னிங்ஸில் 11 வது ஓவருக்குப் பின்னர் 2 வது பந்து பயன்படுத்தப்படும்.

இந்த விதி அதிக பனியின் தாக்கம் காரணமாக பேட்டருக்கு சாதகமான சூழலைக் குறைக்கவும் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாற்றவும் இருப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பனியின் தாக்கம் எந்தளவு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து பந்தை மாற்றுவது குறித்து நடுவர் முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனியின் தாக்கத்தை வைத்து டாஸ் வெல்லும் கேப்டனின் சாதகமான தன்மையை நிலையாக வைப்பதை இந்த விதி நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பிற்பகல் போட்டிகளில் இந்தவிதி பயன்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ராஜஸ்தான் அணிக்கு கேப்டனான ரியான் பராக்..! பேட்டராக தொடரும் சஞ்சு சாம்சன்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது குறித்து மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வது சிறப்பான சாதனை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக வ... மேலும் பார்க்க

ஹசன் நவாஸ் அதிவேக சதம்: 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பாகிஸ்தான் அசத்தல்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹசன் நவாஸ் சதத்தால் 205 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்தது பாகிஸ்தான்.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட... மேலும் பார்க்க

அஸ்வின் வசிக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் உள்ள ஒரு சாலைக்கு இந்திய வீரர் அஸ்வின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.கிரிக்கெட்டின் மிகச் சிறந்த சிந்தனையாளர் என்று அழைக்கப்படும் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் கட... மேலும் பார்க்க

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி வேறு இடத்துக்கு மாற்றம்!

பாதுகாப்பு காரணங்களால் கேகேஆர் - லக்னௌ போட்டி குவாஹாட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.18-வது ஐபிஎல் தொடரில் முதலாவது போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடக்கவிருக்கிறது. ம... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும்! -பிசிசிஐ

நிகழாண்டுக்கான ஐபிஎல்லில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா? என அனைவர் மத்தியிலும் கேள்வியெழுந்துள்ளது. 18-வது ஐபிஎல் தொடர் வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கப் போட... மேலும் பார்க்க

மிரட்டிய டிராவிஸ் ஹெட்: விராட் கோலி அளித்த பரிசால் சதமடித்த நிதீஷ் ரெட்டி!

இந்தியாவின் ஆல்-ரவுண்டர் நிதீஷ் ரெட்டி பூமா பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் விராட் கோலி தனக்கு அளித்த பரிசு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால... மேலும் பார்க்க