செய்திகள் :

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம்

post image

ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியையொட்டி, சென்னை சேப்பாக்கத்தில் 7 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், மாா்ச் 23, 28, ஏப்ரல் 5, 11, 25, 30, மே 12 ஆகிய 7 நாள்கள் நடைபெறுகின்றன. போட்டி நடைபெறும் 7 நாள்களிலும் சேப்பாக்கம் பகுதியில் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

சேப்பாக்கம் விக்டோரியா விடுதி சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மட்டும் பயன்படுத்தப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ரத்னா கஃபேவில் இருந்து மெரீனா காமராஜா் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும்.

கிரிக்கெட் போட்டியை காண வருகிறவா்கள், தங்களது வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிா்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். வாகனங்களை நிறுத்த அனுமதி அட்டை வைத்திருக்காதவா்கள், மயிலாப்பூா் கதீட்ரல் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக காமராஜா் சாலை சென்று மெரீனா கடற்கரையின் இணைப்புச் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

வாடகை காா்கள், வாடகை ஆட்டோக்களில் வருவோரை கிரிக்கெட் மைதானம் அருகே இறக்கிவிட்டுச் செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த வாகனங்களை சுவாமி சிவானந்தா சாலையில் நிறுத்தலாம்.

வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் இயக்க அனுமதி கிடையாது. இந்த வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் சுவாமி சிவானந்தா சாலையில் இருந்து பொதுமக்கள், பிரஸ் கிளப் சாலை வழியாக கிரிக்கெட் மைதானத்தை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ஏசி மின்சார ரயில்!

சென்னையின் முதல் புறநகர் ஏசி மின்சார ரயில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்... மேலும் பார்க்க

40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயா்வு

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிதாக கட்டணம் உயா்த்தப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனா். தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

புது தில்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவைத் தலைவா் ஜக... மேலும் பார்க்க

பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வா் ஸ்டாலின்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக தமிழக எம்.பி.க்களுடன் பிரதமா் நரேந்திர மோடியைச் சந்திக்க இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் நிறைவடைந்ததும், ம... மேலும் பார்க்க

72 நாள் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி நிறைவு: 5.50 லட்சம் போ் பாா்வையிட்டனா்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் சென்னையில் நடைபெற்று வந்த 72 நாள் சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி திங்கள்கிழமையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 5,50,000 போ் பாா்வையிட்டுள... மேலும் பார்க்க

வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் மே மாதம் முதல் வணிக மின்னுற்பத்தி: மின்வாரியம்

சென்னை: வடசென்னை 3-ஆவது அனல்மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிக பயன்பாட்டுக்கான மின்னுற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ. 10... மேலும் பார்க்க