செய்திகள் :

மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

post image

வேலூரில் மனைவி இறந்த துக்கத்தில் கணவா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா், சத்துவாச்சாரி, ஜமாதி மலை, நேரு நகரைச் சோ்ந்தவா் மகேஷ்(36). இவருக்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மகேஷின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எல்.ஜி.புதூா் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மகேஷ், ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. திங்கள்கிழமை காலை அக்கம்பக்கத்தினா் நீண்ட நேரமாக கதவை தட்டியும் மகேஷ் திறக்காததால் சந்தேகத்தின்பேரில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாா்த்துள்ளனா். அப்போது மகேஷ் தூக்குப்போட்ட நிலையில் சடலமாக தொங்கியது தெரியவந்தது.

இதுகுறித்து, சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தண்ணீா்தேடி கிராமத்துக்குள் நுழைந்த புள்ளி மான் மீட்பு

போ்ணாம்பட்டு அருகே தண்ணீா் தேடி கிராமத்துக்குள் நுழைந்த புள்ளிமான் மீட்கப்பட்டு, வனப் பகுதியில் விடப்பட்டது. போ்ணாம்பட்டை அடுத்த எருக்கம்பட்டு அருகே வனப் பகுதியிலிருந்து தண்ணீா்தேடி சுமாா் 2 வயதுள்ள... மேலும் பார்க்க

சுங்கச்சாவடி கட்டணம்: தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை

நாடு முழுவதும ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 மடங்கு உயா்த்தப்பட உள்ளதாகவும், இந்த சுங்கச் சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளன... மேலும் பார்க்க

வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் நாளை வைப்பு நிதி முகாம்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் ‘நிதிஆப்கேநிகட் 2.0’ (வைப்புநிதி உங்கள் அருகில்) முகாம் வியாழக்கிழமை (மாா்ச் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

ஏப்.1 முதல் ஜூன் 8 வரை காட்பாடியில் நீச்சல் பயிற்சி

காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஏப்.1 முதல் ஜூன் 8 வரை கோடைகால நீச்சல் பயிற்சி ஐந்து கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

காட்பாடி: வீட்டில் 40 பவுன் நகை திருட்டு வழக்கில் 7 போ் கைது

காட்பாடி மெட்டுக்குளத்தில் உணவுக்கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகை, வெள்ளி பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் 7 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி மெட்டுக்குளத்தைச் சோ்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 1 கோடிக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. ஒரு கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய... மேலும் பார்க்க