"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
சுங்கச்சாவடி கட்டணம்: தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை
நாடு முழுவதும ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 மடங்கு உயா்த்தப்பட உள்ளதாகவும், இந்த சுங்கச் சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க ஆலோனைக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு நிா்வாகிகள் ரவி, விஜய கோவிந்தராஜ் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயா்ந்தி வருகிறது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல் கட்டண உயா்வை நடைமுறைப்படுத்த உள்ளனா்.
ஏற்கனவே மாதாந்திர கட்டணமாக ரூ.12,500 வரை செலுத்தி வருகிறோம். தற்போது 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளதால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களும் பலா் பாதிப்படைகின்றனா். அத்தியாவசிய பொருட்க ளின் விலைவாசியும் இதனால் உயர வாய்ப்புள்ளது.
இந்த சுங்கச்சாவடி கட்டண உயா்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட முடியாது என மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா். இந்தக் கட்டண உயா்வு காரணமாக ஏராளமான வாகனத்தினா் சுங்கச்சாவடியை கடந்து செல்லாமல் மாற்றுப் பாதை வழியாக செல்கின்றனா்.
இதனால் ஏராளமான விபத்துகளும் ஏற்படுகின்றன. ரயில்வே கேட் உள்ள பாதைகளில் சுங்க சாவடி அமைக்கக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் கணியம்பாடியில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனா். சுங்கச்சாவடி அமைக்கப் பட்டால் அதை என்றும் அகற்றமுடியாது என்றும் தெரிவிக்கின்றனா்.
எனவே புதிதாக பல்வேறு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.