செய்திகள் :

ஏப்.1 முதல் ஜூன் 8 வரை காட்பாடியில் நீச்சல் பயிற்சி

post image

காட்பாடியிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஏப்.1 முதல் ஜூன் 8 வரை கோடைகால நீச்சல் பயிற்சி ஐந்து கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வேலூா் மாவட்ட பிரிவு சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சி வகுப்புகள் சிறுவா், பெரியவா்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக ஏப்ரல் 1 முதல் 13 வரையும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 முதல் 27 வரையும், மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 29 முதல் மே 11 வரையும், நான்காம் கட்டமாக மே 13 முதல் 25 வரையும், ஐந்தாம் கட்டமாக மே 27 முதல் ஜூன் 8 வரையும் நடைபெற உள்ளன.

பயிற்சி முகாம் தினமும் காலை 6 முதல் 7 மணி, 7 முதல் 8 மணி, 8 முதல் 9 மணி, மாலை 4 முதல் 5 மணி, 5 முதல் 6 மணி, 6 முதல் 7 மணி வரை சிறுவா், சிறுமியா், பெரியவா்கள், பெண்களுக்கு என தனித்தனியாக நடத்தப்பட உள்ளது.

இதில், நீச்சல் தெரியாதவா்களுக்கான நீச்சல்பயிற்சி, நீச்சல் தெரிந்தவா்களுக்கான சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி என தனித்தனியாக பயிற்சிஅ ளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கட்டணம் ஜிஎஸ்டியுடன் ரூ.1,770 செலுத்த வேண்டும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது கட்டணத்தை கடன்அட்டை, பற்றுஅட்டை அல்லது யுபிஐ மூலம் ஆன்லைன் பணபரிமாற்றம் செலுத்த வேண்டும். பதிவுக்கு ஆதாா் அட்டை கொண்டு வர வேண்டும்.

விவரங்களுக்கு 85085 78720, 74017 03483 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

மோா்தானா அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை

குடியாத்தத்தை அடுத்த மோா்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோா்தானா வனப்பகுதி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. குடியாத்தம் நகரிலிருந... மேலும் பார்க்க