செய்திகள் :

ஐபிஎல் தொடரில் தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த பிரசித் கிருஷ்ணா!

post image

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

குஜராத் டைட்டன்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 விக்கெட்டுகளுடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

வெற்றியின் ரகசியம் என்ன?

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமாக செயல்படுவதற்கான ரகசியத்தை பிரசித் கிருஷ்ணா பகிர்ந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பவர்பிளேவில் 5-வது அல்லது 6-வது ஓவரில் பந்துவீசுவது எனக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு. ஆனால், இந்த பொறுப்பு எனக்கு புதிதாக தெரியவில்லை. ஏனெனில், ஒருநாள் போட்டிகளில் இதனை நான் செய்துள்ளேன். நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறவில்லையென்றால், அது சிறப்பானதாக இருக்காது.

இதையும் படிக்க: நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதை நினைத்து தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை நான் தவறவிட்டேன். அதன் பின், மீண்டும் ஐபிஎல் தொடரில் இணைந்த பிறகு, நன்றாக பந்துவீச வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். குஜராத் டைட்டன்ஸ் அணி ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என நினைத்தேன்.

குஜராத் டைட்டன்ஸ் அணி சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன். அணியில் உள்ள அனைவரும் அவர்களது சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார்கள். ஷுப்மன் கில் அணியை நன்றாக வழிநடத்துகிறார். அவருக்கு யாரிடம் எதனைக் கூற வேண்டும் என்பது தெரிந்திருக்கிறது. அணியின் திட்டங்கள் என்னவென்று அவருக்குத் தெளிவாக தெரிகிறது. அவர் வீரர்களுடன் தொடர்ந்து பேசுகிறார். அவர் கொடுக்கும் ஆலோசனைகள் உண்மையில் மிகவும் உதவியாக இருக்கிறது. அவர் ஒவ்வொரு நாளும் சிறப்பான கேப்டனாக மாறி வருகிறார்.

இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

ஆஷிஸ் நெஹ்ரா வீரர்களுக்கு மிகவும் உதவுகிறார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது. ஆடுகளத்தை கணிப்பது, பேட்டர்களின் மனநிலையை புரிந்துகொள்வது குறித்து அவரது அறிவுரைகள் மிகவும் உதவியாக உள்ளன என்றார்.

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் - ... மேலும் பார்க்க

வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டு வர தோனியிடம் பேச வேண்டும்: சேவாக்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். க... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; முதலிடத்துக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக தான் ஒருபோதும் கூறவில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டொரி தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி... மேலும் பார்க்க

மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதில் மகிழ்ச்சி என விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்... மேலும் பார்க்க