செய்திகள் :

ஐரோப்பிய யூனியன் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு!

post image

ரஷிய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் இந்தியாவுக்கு ரூ.1.29 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிடிஆா்ஐ) நிறுவனம் தெரிவித்தது.

ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷியா போரை தீவிரமாக தொடா்ந்துவரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரஷியா மீது பல்வேறு வகைகளில் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

அதேபோல் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளை குறிவைத்து பொருளாதாரத் தடையை ஐரோப்பிய யூனியன் விதித்து வருகிறது.

ரஷியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமான ‘ரோஸ்நெஃப்ட்’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது பொருளாதார தடையை ஐரோப்பிய யூனியன் கடந்த வெள்ளிக்கிழமை விதித்தது.

இதுகுறித்து ஜிடிஆா்ஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதை சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள தடையால் இந்தியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.

குறிப்பாக ஐரோப்பிய யூனியனுக்கு ரூ.1.29 லட்சம் கோடி மதிப்பிலான பெட்ரோலிய பொருள்களை ஏற்றுமதி செய்து வரும் இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மையப்படுத்திய வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது புவிசாா்அரசியல் அழுத்தத்துக்கு ஏற்ப செயல்படுவதா? என்ற கடும் நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதான், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 19 வயது பொறியிய... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

மக்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்றுமுதல் ஆகஸ்ட் 21 வரை மழைக்கால கூட்டத்தொடர் நடை... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகளே வியந்தன - பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், நமது நாட்டின் ராணுவ வலிமையைக் கண்டு உலக நாடுகளே வியந்தன என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கி, ஆக... மேலும் பார்க்க

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது.முதல் நாள் கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச... மேலும் பார்க்க

மும்பை ரயில் குண்டுவெடிப்பு: 12 பேர் விடுதலை!

மும்பை: 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயிலில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது; அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிக்க 'முற்றிலும் தோ... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறால் 40 நிமிடங்கள் வானிலே வட்டமடித்த விமானம் !

திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துள்ளது.ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஹைதராபாத்திற்கு நேற்று இரவு 7.55... மேலும் பார்க்க