செய்திகள் :

Monsoon session: `ஆபரேஷன் சிந்தூர்; பொருளாதாரம்; நக்சலிசம்' - செய்தியாளர்களிடம் மோடி கூறியதென்ன?

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) முதல் தொடங்குகிறது.

இந்தக் கூட்டத்தொடரில், 17 மசோதாக்களை மத்திய அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்யவிருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேற்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பஹல்காம் தாக்குதல், கீழடி ஆய்வறிக்கை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பத் தயாராக இருக்கின்றன.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி
Parliament Monsoon Session - மோடி

அ.தி.மு.க தரப்பிலிருந்து, தமிழக காவல்துறையின் லாக்கப் மரணங்கள், போதைப்பொருள் புழக்கம், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பப்படவிருக்கின்றன.

இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய மோடி, "மழைக்காலம் புதிய உருவாக்கத்தின் சின்னம்.

விவசாயிகளின் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்திற்கும் மழை மிக முக்கியமானது.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஒரு வெற்றி கொண்டாட்டம் போன்றது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் கொடி ஏற்றப்படுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை சேர்க்கும் தருணம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் 100 சதவிகிதம் எட்டப்பட்டது.

தீவிரவாதிகளின் கூடாரங்கள் 22 நிமிடங்களுக்குள் தரைமட்டமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் வலிமையை மொத்த உலகமும் கண்டது.

இப்போதெல்லாம், உலக மக்களை நான் சந்திக்கும் போதெல்லாம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீதான உலகத்தின் ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில், 2014-க்கு முன்பு உலகப் பொருளாதாரத்தில் நாம் 10-வது இடத்தில் இருந்தோம்.

இன்று, உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம்.

அதேபோல், 2014-க்கு முன்பு நாட்டில் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்தது.

இன்று, இந்த விகிதம் சுமார் இரண்டு சதவீதமாகக் குறைந்து வருவதால், அது நம் சாதாரண மக்களின் வாழ்க்கையில் ஒரு நிம்மதியாக மாறியுள்ளது.

25 கோடி ஏழை மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இது உலகின் பல நிறுவனங்களால் பாராட்டப்படுகிறது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - மோடி

நக்சலிசம்

இன்று, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் நமது பாதுகாப்புப் படைகள் முன்னேறி வருகின்றன.

பல மாவட்டங்கள் இன்று நக்சலிசத்திலிருந்து விடுபட்டுள்ளன. 'சிவப்பு வழித்தடங்கள்' எல்லாம் 'பசுமை வளர்ச்சி மண்டலங்களாக' மாறி வருகின்றன.

இந்திய அரசியலமைப்பு நக்சலிசத்திற்கு எதிராக வெற்றி பெற்று வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

அன்று ஜெ.,வுக்கு நிகரான பதவி; அரை நூற்றாண்டு காலம் அதிமுகவில் பயணித்த அன்வர் ராஜா கட்சி மாறியது ஏன்?

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 1949-ஆம் ஆண்டு பிறந்தவர் அன்வர் ராஜா. பட்டதாரியான அன்வர் ராஜா பள்ளி மற்றும் கல்லூரிகளில் கால்பந்தாட்ட வீரராகவும் களம் கண்டவர். அண்ணாவின் பேச்சுகளினால் கவரப்பட்ட அன்... மேலும் பார்க்க

'முதலமைச்சர் ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்' - தமிழிசை சௌந்தரராஜன்

லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இது தொடர்பாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!' - உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள... மேலும் பார்க்க

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்' - அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.அபோல்லோ மருத்துவமனை அறிக்க... மேலும் பார்க்க

`மாநில அரசின் கடமை; முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன்!’ - ஜோதிமணி

"2024-2025 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் சாத்தியக்கூறு கூட வரவில்லை. கரூர் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்பட நி... மேலும் பார்க்க