செய்திகள் :

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது!

post image

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒடிஸா காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதான், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 19 வயது பொறியியல் மாணவி புவனேஸ்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தெரிவித்திருப்பதாவது:

”கடந்த மார்ச் 18 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தோழிகள் இருவரை புவனேஸ்வரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற உதித் பிரதான், குளிர்பானம் எனக் கூறி அவர்களுக்கு மதுபானத்தை அளித்துள்ளார்.

பின்னர், 19 வயது மாணவி மயக்கமடைந்த நிலையில், அவரை உதித் பிரதான் மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து வெளியில் கூறினால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அந்த மாணவிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகார் அளிக்க தயங்கிய மாணவி, 4 மாதங்களுக்கு பிறகு மஞ்சேஸ்வர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை இரவே உதித் பிரதானை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதித் பிரதானை இன்று நீதிமன்றத்தில் புவனேஸ்வர் காவல்துறையினர் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இந்த நிலையில், ஒடிஸா மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் உதித் பிரதானை உடனடியாக இடைநீக்கம் செய்வதாக தேசிய இளைஞரணி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, ஒடிஸாவின் பாலாசோரில் உதவிப் பேராசிரியர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, காங்கிரஸ் இளைஞரணி தலைவர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு அந்த மாநிலத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The Odisha Congress Youth Wing president has been arrested in a case of sexual assault on a student.

இதையும் படிக்க : மும்பை ரயில் குண்டுவெடிப்பு: குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரும் விடுதலை; அரசு தரப்பின் தோல்வி

குஜராத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை! அதிர்ச்சி தரும் காரணம்

குஜராத் மாநிலத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், நிதிநிலைமைதான் இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்... மேலும் பார்க்க

பாம்பை வெறும் கைகளால் பிடித்த பாலிவுட் நடிகர் சோனு சூட் !

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது வீட்டு வளாகத்திற்குள் நுழைந்த பாம்பை வெறும் கைகளால் பிடித்தார். பாலிவுட் நடிகர் சோனு சூட் சனிக்கிழமை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர் த... மேலும் பார்க்க

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்தது!

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் மூன்று டயர்கள் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஏர் இந்தியாவின் ஏஐ2744 விமானம் இன்று காலை மும்பை சத்திரபதி சிவாஜி சர்வத... மேலும் பார்க்க

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு !

உ.பி.யில் அம்பேத்கர் சிலையை பெயர்த்து கால்வாயில் வீசிய மர்மநபர்களால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேச மாநிலம், கங்காநகரில் உள்ள கோடாபூர் கிராமத்தில் பி.ஆர். அம்பேத்கரின் சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்... மேலும் பார்க்க

சசி தரூருக்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம்: காங்கிரஸ் மூத்த தலைவர்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே. முரளீதரன் கூறியுள்ளார். கடந்த 2022 காங்கிரஸ் தலைவர் தேர்தல் முதலே கட்சியின் மீது சசி தரூர் அதிருப்தியில்... மேலும் பார்க்க

தில்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிதாக மாற்றப்பட்ட... மேலும் பார்க்க