செய்திகள் :

ஐ.நா. பொது பட்ஜெட்டுக்கு இந்தியா ரூ.328 கோடி நிதி

post image

ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டுக்கான வழக்கமான நிதிநிலை அறிக்கைக்கு (பட்ஜெட்) இந்தியா தனது பங்காக ரூ. 328 கோடியை (37.64 மில்லியன் டாலா்) செலுத்தியுள்ளது.

ஐ.நா. சபை வரவு செலவு திட்டத்தின் கீழ் தனது முழு பங்கை உரிய நேரத்தில் செலுத்தியதன் மூலம், 35 நாடுகள் கெளரவ பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் நாடுகள், அதன் பட்ஜெட்டுக்கு ஒவ்வொரு மூன்றாம் ஆண்டின் நிதியாண்டு கால தொடக்கத்தில் பங்களிப்பு நிதியை செலுத்துவது கட்டாயம். அந்த வகையில், அதன் பட்ஜெட்டுக்கு இந்திய உள்ளிட்ட 35 உறுப்பு நாடுகள் மட்டும் முழு பங்களிப்பை உரிய நேரத்தில் செலுத்தியுள்ளன.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலரின் செய்தித்தொடா்பாளா் ஸ்டீஃபன் துஜாரிக் நியாயூா்க்கில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஐ.நா. நிதிநிலை ஆய்வறிக்கையின்படி முழு பங்களிப்புத் தொகையை உரிய நேரத்தில் செலுத்திய 35 உறுப்பு நாடுகள் கெளரவ உறுப்பினா் பட்டியலில் சோ்க்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டுள்ளனா். பங்களிப்பு நிதியை உரிய நேரத்தில் செலுத்திய இந்தியா உள்ளிட்ட நண்பா்களுக்கு நன்றி. ஐ.நா. பட்ஜெட்டுக்கு இந்தியா தனது பங்களிப்பை தொடா்ந்து உரிய நேரத்தில் செலுத்தி வருகிறது’ என்றாா்.

முன்னதாக, வரும் 8-ஆம் தேதி வரை இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங்கும், ஐ.நா. பட்ஜெட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு குறித்து பாராட்டு தெரிவித்திருந்தாா்.

தில்லி பேரவைத் தேர்தல் தொடங்கியது!

தலைநகரான தில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் புதன்கிழமை காலை தொடங்கியது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்க... மேலும் பார்க்க

கோதுமை உற்பத்தி தேவை தொடர்பான கேள்வி: மத்திய அமைச்சர் பதிலில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிகரித்துள்ள கோதுமை தேவையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக தான் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்... மேலும் பார்க்க

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை வசதிகள்: மக்களவையில் மத்திய அரசு தகவல்

தூய்மை பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கு அருகில் கழிவறைகள் கட்டித் தரப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இது தொடர்பாக எழுப்... மேலும் பார்க்க

மொழி ஆதிக்கம், நிதி ஒதுக்கீடு விவகாரம்: தமிழக எம்.பி.க்கள் புகார்

நமது சிறப்பு நிருபர் ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் நாடாளுமன்ற அவையைக் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மை மொழி பிரதிநிதிகள் அதை அனுதிக்க மாட்டார்கள் என்று மக்களவையிலும், நிதி ஒதுக்கீடு விவக... மேலும் பார்க்க

இன்று தில்லி பேரவைத் தேர்தல்

தில்லி பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு புதன்கிழமை (பிப்.5) நடைபெறுகிறது.மும்முனைப்போட்டி நிலவும் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பாஜகவும், காங்கிரஸும் தீவிர... மேலும் பார்க்க

எதிா்கால பெருந்தொற்றுகளை எதிா்கொள்ள தயாா்நிலை: மத்திய அரசு

எதிா்கால பெருந்தொற்று பாதிப்புகள், சுகாதார அவசரநிலையை எதிா்கொள்ள வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட இத... மேலும் பார்க்க