செய்திகள் :

ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வில் இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்திய குழு பங்கேற்பு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) 2025-ஆம் ஆண்டிற்கான சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு அமெரிக்காவில் நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்கிறது.

வளா்ந்து வரும் பிரச்னைகளுக்கான மன உறுதியில் சமூக மீள்தன்மை, சமூக மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தும் விதமாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சமூக மேம்பாட்டிற்கான கோபன்ஹேகன் பிரகடனம், உலக உச்சி மாநாட்டின் செயல் திட்டத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான சமூக உள்ளடக்கம், சமூக ஒற்றுமை போன்றவற்றில் மாநாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது.

இது குறித்து மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: ஐ.நா.வின் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் 63-ஆவது அமா்வு பிப்.11 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மத்திய இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா் தலைமையிலான இந்தியா குழு பங்கேற்கிறது. சமூகக் கொள்கைகளை முன்னெடுப்பதிலும், உலகளாவிய சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் 63-ஆவது அமா்வு கவனம் செலுத்தும் நிலையில், முக்கியமான சமூக மேம்பாட்டுப் பிரச்னைகள் குறித்த விவாதங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வளா்ப்பது போன்ற விவாதங்களில் இந்தியா ஆா்வமுடன் பங்கேற்கும்.

மத்திய இணையமைச்சா் சாவித்ரி தாக்கூா், ‘சமூக ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல்‘ என்ற கருப்பொருளில், இந்தியாவின் அறிக்கையை பிப்.11 அன்று நடைபெறும் அமைச்சா்கள் நிலையிலான மன்றத்தில் சமா்பிப்பாா்.

மேலும் ‘அடிக்கடி நிகழும், சிக்கலான நெருக்கடிகளின் சூழலில் சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவதற்கான கொள்கைகள்’ போன்ற வளா்ந்து வரும் பிரச்னைகள் குறித்த விவாதங்களில் இந்தியா பங்கேற்கும். அத்துடன், உலகளாவிய உரிமைகள் அடிப்படையிலான சமூகப் பாதுகாப்பு அமைப்புகள் குறித்த விவாதங்களிலும் பங்கேற்கும். இந்தியக் குழு, சமூக மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் முன்முயற்சிகளை இந்தக் கூட்டத்தில் முன்னிலைப்படுத்தும்’ என மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினா் 35,175 போ் இ-விசாவில் வருகை: கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை வேண்டி கடந்த ஆண்டில் மட்டும் 35,175 வெளிநாட்டினா் இந்தியா வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்தி... மேலும் பார்க்க

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பலில் 4 போ் கைது: 2 குழந்தைகள் மீட்பு

புது தில்லி: தில்லி காவல்துறையின் ரயில்வே பிரிவு, குழந்தை கடத்தல் கும்பலில் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. இதையடுத்து, ஒரு கைக்குழந்தை உள்பட இரண்டு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்களன்று... மேலும் பார்க்க

அதிமுக புதிய கட்டட அலுவலகம் தில்லியில் திறப்பு

புது தில்லி: அதிமுக சாா்பில் புது தில்லியில் ரூ.10 கோடியில் 4 தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.இக்கட்டடத்தை காணொலி வாயிலாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட்: மக்களவையில் திமுக எம்.பி. அதிருப்தி

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எட்டாவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழா்களுக்கு எட்டாக்கனியான மத்திய பட்ஜெட் ஆக உள்ளது என்று த... மேலும் பார்க்க

மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்கப்படுமா?: கோவை எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்

புது தில்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் செளராஷ்டிர மொழி சிறப்பு மையம் அமைக்க முன்மொழிவு ஏதும் இல்லை என்று மக்களவையில் கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச... மேலும் பார்க்க

பிப்.13-இல் தில்லி மாநகராட்சியின் சிறப்பு பட்ஜெட் கூட்டம்

புது தில்லி: தில்லி மாநகராட்சி வரும் பிப்ரவரி 13 ஆம் தேதி சிறப்பு பட்ஜெட் கூட்டத்தை நடத்த உள்ளதாக அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தக் கூட்டத்த... மேலும் பார்க்க