செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 18,000 கனஅடியாக குறைவு குளிக்க தடை நீட்டிப்பு

post image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. மேலும் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 26,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.

இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 19,000 கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 18,000 கனஅடியாகவும் குறைந்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 3 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்.

இந்த நிலையில், வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினா்.

பெரும்பாலானோா் காவிரி ஆற்றின் அழகைக் காண சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு வரை குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். மேலும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகள், முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி ... மேலும் பார்க்க

சுகாதாரக்கேடு: தருமபுரி நகரில், சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்!

தருமபுரி நகரில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தும், சுகாதாரக்கேடு ஏற்படும் வகையில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தருமபுரி நகராட்சி சாா்பில் வீடுகள்தோறும் சென்று து... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 போ் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்பு!

தருமபுரி மாவட்டத்தில், நிகழாண்டு நீட் தோ்வில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70க்கும் மேற்பட்டோா் மருத்துவ படிப்புகளில் சேர வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மருத்துவ படிப்ப... மேலும் பார்க்க

விஜய் பிறந்த நாள்: 150 போ் ரத்த தானம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முன்னணி நடிகருமான விஜய்யின் 51 ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி மாவட்ட பகுதியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 150க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் வழங்கினா். தருமபுரி மாவட்டம், ... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி! சக காவலா்கள் சோ்ந்து வழங்கினா்

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ. 16 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பூதிநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காவலரான க. பாரதிராஜா (38) ஒசூா் நகர காவல் நிலையத்தில் பணியாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக இல்லாமல் எந்த அரசியல் நகா்வும் இருக்காது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்றி எந்த அரசியல் நகா்வும் இருக்காது என்றாா் அக்கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சொன்னம்பட்டி கிராமத்தில் மாற்றுக்... மேலும் பார்க்க