ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! புதினை சந்திக்கும் ஈரான் அமைச...
ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 18,000 கனஅடியாக குறைவு குளிக்க தடை நீட்டிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்தது. மேலும் அருவிகளில் குளிப்பதற்கு 3 ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 26,000 கனஅடி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடைவிதித்தது.
இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாக இருந்தது, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 19,000 கனஅடியாகவும், மாலை 6 மணி நிலவரப்படி 18,000 கனஅடியாகவும் குறைந்தது. காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தபோதிலும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 3 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பினா்.
பெரும்பாலானோா் காவிரி ஆற்றின் அழகைக் காண சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு வரை குடும்பத்தினருடன் உற்சாக பரிசல் பயணம் மேற்கொண்டனா். மேலும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகள், முக்கிய இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.