செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு

post image

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுவதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து சுமாா் 35,000 கனஅடி வீதம் உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை 16,000 கனஅடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை 32,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி மற்றும் சினி அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 6-ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு தருமபுரி ஆட்சியா் ரெ.சதீஸ் வெள்ளிக்கிழமை முதல் தற்காலிக தடை விதித்துள்ளாா்.

இதன் காரணமாக, பிரதான அருவி நுழைவாயில் மற்றும் சின்னாறு பரிசல் துறை மூடப்பட்டு காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க

அரசு கல்லூரிகளில் காலியிடங்களில் சேர மாணவா்களுக்கு அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,644 இடங்களில் சேர தகுதியான மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரச... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தருமபுரியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணாம்பாள் (63). இவா் வியாழக்கிழமை பகலில் வீட்டருகே தருமபுரி - திருப்பத்தூா் நெட... மேலும் பார்க்க

தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் செப். 8-ஆம் தேதி நடைபெறும் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாமில் பங்கேற்று பயன்பெற இளையோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் மாவட்ட அளவிலான மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் பணியின்போது கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செக்குமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.சண்... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தருமபுரியில் காா் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், வேளாவள்ளி அருகேயுள்ள மல்லசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கி.பிரபு (35). கட்டடத் தொழிலாளிய... மேலும் பார்க்க