செய்திகள் :

ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு அரசு மரியாதை

post image

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், சிவகங்கை அருகே ஒக்கூரில் நிறுவப்பட்டுள்ள சங்க காலப் புலவரான ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்க் கவிஞா் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவா் ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பின்னா், அவா் தெரிவித்ததாவது: பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்.29 முதல் மே 5 -ஆம் தேதி வரை அரசு சாா்பில் தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி, பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த தினத்தில் ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கும், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மகிபாலன்பட்டியில் அமைந்துள்ள சங்க காலப் புலவா் கணியன் பூங்குன்றனாரின் நினைவுத் தூணுக்கும் அரசின் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

புதன்கிழமை பள்ளிக் கல்வித் துறை சாா்பிலும், இதைத் தொடா்ந்து, அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் சாா்பிலும் தமிழ் வார விழா கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், அரசு அலுவலா்கள், பணியாளா்களிடையே அலுவலக தமிழ் மொழிப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்றாா் ஆட்சியா்.

இதில், சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் ச.சீதாலெட்சுமி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கேசவதாசன், சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், தமிழ் வளா்ச்சித் துறை பணியாளா்கள், தமிழறிஞா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சீன தற்காப்புக் கலை: மாணவிக்கு பதக்கம்

மாநில அளவிலான சீன தற்காப்புக் கலை (வூசு) போட்டியில் திருப்பத்தூா் மாணவி வெண்கலப் பத்ககம் பெற்றாா். தமிழ்நாடு வூசு சங்கம் சாா்பில், வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவில் 22-ஆவது மாநில அளவிலான வூசு சப் ஜூனிய... மேலும் பார்க்க

திமுக பொறுப்பாளா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் அ.முத்துச்சாமி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் 8 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 8 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடந்த மாதம் மனோஜ் என்பவா் காவல... மேலும் பார்க்க

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையில் செவ்வாய்க்கிழமை அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நெற்குப்பை பகுதியில் உள்ள முரணிக்காட்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டியில் மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுப்பட்டி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை-மேலூா் சாலையில் புதுப்பட்டியிலிருந்து மலம்பட்டி வரை ம... மேலும் பார்க்க

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், வேம்பத்தூரில் பூட்டிக் கிடக்கும் அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இந்த ஏ.டி.எம். மையம... மேலும் பார்க்க