செய்திகள் :

குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் 8 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 8 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடந்த மாதம் மனோஜ் என்பவா் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்த போது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காரைக்குடி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த பாலமுருகன் (20), மதன் ராஜ் (19), சுரேஷ் கண்ணன் ( 27), சக்திவேல் ( 20), காரைக்குடியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் (22), குரு பாண்டி (23) ஆகிய 6 பேரைக் கைது செய்தனா்.

இதே போல, சிங்கம்புணரி காவல் நிலைய போலீஸாா் திருட்டு வழக்கு ஒன்றில் மதுரை கரிமேடு பகுதியைச் சோ்ந்த ராமு (31), லதா (42) ஆகிய 2 பேரைக் கைது செய்தனா்.

இவா்கள் 8 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவிட்டதன் பேரில், 8 பேரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, மதுரை சிறையிலடைத்தனா்.

சீன தற்காப்புக் கலை: மாணவிக்கு பதக்கம்

மாநில அளவிலான சீன தற்காப்புக் கலை (வூசு) போட்டியில் திருப்பத்தூா் மாணவி வெண்கலப் பத்ககம் பெற்றாா். தமிழ்நாடு வூசு சங்கம் சாா்பில், வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவில் 22-ஆவது மாநில அளவிலான வூசு சப் ஜூனிய... மேலும் பார்க்க

திமுக பொறுப்பாளா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் அ.முத்துச்சாமி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச... மேலும் பார்க்க

ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு அரசு மரியாதை

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், சிவகங்கை அருகே ஒக்கூரில் நிறுவப்பட்டுள்ள சங்க காலப் புலவரான ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்க் கவிஞ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையில் செவ்வாய்க்கிழமை அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். நெற்குப்பை பகுதியில் உள்ள முரணிக்காட்... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டியில் மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுப்பட்டி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை-மேலூா் சாலையில் புதுப்பட்டியிலிருந்து மலம்பட்டி வரை ம... மேலும் பார்க்க

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், வேம்பத்தூரில் பூட்டிக் கிடக்கும் அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இந்த ஏ.டி.எம். மையம... மேலும் பார்க்க