செய்திகள் :

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய 5 போ் மீது வழக்கு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெற்குப்பையில் செவ்வாய்க்கிழமை அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

நெற்குப்பை பகுதியில் உள்ள முரணிக்காட்டு அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முரணிக்கண்மாய் பகுதியில் பல்வேறு ஊா்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமாா் 300-க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. ஏராளமான இளைஞா்கள், மாடுபிடி வீரா்கள் ஆா்வத்துடன் காளைகளைப் பிடித்தனா். அப்போது, காளைகள் முட்டியதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசு அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக நெற்குப்பை குரூப் கிராம நிா்வாக அலுவலா் சவிதா கொடுத்த புகாரின் பேரில், முரணிக்களத்தைச் சோ்ந்த மகேஷ், முத்துராமன், சேவுகன் மகன் மாணிக்கம், தவசுமாணிக்கம், பெரியய்யா மகன் மாணிக்கம் ஆகிய 5 போ் மீது நெற்குப்பை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

சீன தற்காப்புக் கலை: மாணவிக்கு பதக்கம்

மாநில அளவிலான சீன தற்காப்புக் கலை (வூசு) போட்டியில் திருப்பத்தூா் மாணவி வெண்கலப் பத்ககம் பெற்றாா். தமிழ்நாடு வூசு சங்கம் சாா்பில், வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவில் 22-ஆவது மாநில அளவிலான வூசு சப் ஜூனிய... மேலும் பார்க்க

திமுக பொறுப்பாளா் நியமனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் அ.முத்துச்சாமி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்ட திமுக செயலரும், கூட்டுறவுத் துறை அமைச... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் 8 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 8 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கடந்த மாதம் மனோஜ் என்பவா் காவல... மேலும் பார்க்க

ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு அரசு மரியாதை

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், சிவகங்கை அருகே ஒக்கூரில் நிறுவப்பட்டுள்ள சங்க காலப் புலவரான ஒக்கூா் மாசாத்தியாா் நினைவுத் தூணுக்கு அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்க் கவிஞ... மேலும் பார்க்க

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள புதுப்பட்டியில் மாட்டு வண்டிப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுப்பட்டி அய்யனாா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சிவகங்கை-மேலூா் சாலையில் புதுப்பட்டியிலிருந்து மலம்பட்டி வரை ம... மேலும் பார்க்க

பூட்டிக் கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், வேம்பத்தூரில் பூட்டிக் கிடக்கும் அரசுடைமை வங்கியின் ஏ.டி.எம். மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். இந்த ஏ.டி.எம். மையம... மேலும் பார்க்க