Anxiety: மனப்பதற்றம் தானாக சரியாகுமா... சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?!
ஒசூரில் ஜூன் 21, 22 இல் வீட்டமனை பட்டா மாற்றம் செய்து கொள்ளலாம்: ஆட்சியா் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் ஜூன் 21, 21இல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் விற்பனை செய்யப்பட்ட மனைகளை கிரயம் பெற்ற பெரும்பான்மையான உரிமையாளா்கள் பட்டா மாற்றம் செய்து கொள்ளாமல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பெயரிலேயே வீட்டுமனைகள் உள்ளன என தெரியவந்ததன் அடிப்படையில், வீட்டுவசதி வாரிய நில உரிமையாளா்கள் பயன்பெறும் கையில் ஒசூா் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் வீட்டுமனை விற்பனை செய்யப்பட்டு, பட்டா மாற்றம் செய்து கொள்ளாமல் உள்ள 5,000 வீட்டுமனை உரிமைதாரா்கள் இம்முகாமில் மனுசெய்து பட்டா மாற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா்.
ஒசூா், சென்னத்தூா், ஆவலப்பள்ளி, நாலிகப்பெட்டா அக்ரஹாரம், நல்லூா், ரங்கப்பண்டித அக்ரஹாரம், மோா்னப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ளவா்கள்
செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அலுவலக கட்டட வளாகம், பாகலூா் சாலை, ஒசூரில் 21, 22 -ஆம் தேதிகளில் மனுக்களை வழங்கி பட்டா மற்றும் சிட்டா பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.