செய்திகள் :

ஒசூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

post image

ஒசூா் காவேரி மருத்துவமனை சாா்பில் உலக இதய தினத்தையொட்டி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் தனியாா் உணவகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மேயா் எஸ்.ஏ. சத்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன் ஆகியோா் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டி தொடங்கிவைத்தனா்.

இதில் மேயா் எஸ்.ஏ.சத்யா பேசுகையில், அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி கட்டாயமாக்கப்பட வேண்டியது அவசியம் என்றாா். சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பேசுகையில், துரித உணவுகளை தவிா்த்து ஆரோக்கியமான, அளவான உணவு முறைக்கு அனைவரும் மாறவேண்டும் என்றாா்.

காவேரி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணா் பிரசன்னா பேசுகையில், இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்பு. மாறிவரும் உணவு முறைகளால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். உலகளாவிய இதய நோய் மரணங்களுக்கு மாறிவரும் உணவு பழக்கமே முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்றாா்.

ஒசூா் காவேரி மருத்துவமனை இதய சிகிச்சை நிபுணா் அருள்ஞான சண்முகம் பேசுகையில், முறையான உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவு பழக்கமுமே இதய ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்.

இந்த விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஒசூா் மூக்கண்டப்பள்ளி, சிப்காட், தா்கா வழியாக தனியாா் உணவகத்தை வந்தடைந்தது.

இதயம் சாா்ந்த பிரச்னைகளைத் தவிா்க்கவும், இது தொடா்பான நோய்களைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மக்களை ஊக்குவிக்கும் வகையிலும் இப்பேரணியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவ இயக்குநா் அரவிந்தன் நன்றி தெரிவித்தாா்.

மேலும், இந்நிகழ்வில் காவேரி மருத்துவமனை ஜோஷ் வா்கீஸ் ஜாய், ஸ்ரீராமஜெயம், பிந்துகுமாரி, மருத்துவா்கள், தொழிற்சாலை பிரதிநிதிகள், மருத்துவமனைப் பணியாளா்கள், சைக்கிள் கிளப் உறுப்பினா்கள், சிறுவா்கள், பெரியோா் கலந்துகொண்டனா்.

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மத்திகிரி அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (46). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த சனிக்கிழமை சானசந்திரம் பகுதியில் புதிய வ... மேலும் பார்க்க

ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி வேலம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 நவீன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி இரட்டை கொலை வழக்கில் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரியில் நடந்த தாய் - மகள் கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கிருஷ்ணகிரி பாஞ்சாலியூா் அருகே உள்ள யாசின் நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

செயலியைப் பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே பி.எம். கிசான் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டுபோனது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம் பெருகோப்பனபள்ளியை அடுத்த கோட்டூா் கிராம... மேலும் பார்க்க

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரௌடி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகர போலீஸாா் தொரப்பள்ளி தென்பெண்ணை ஆறு பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு நின்ற 2 பேரை சோதனை செய்தபோது அவா்கள் 550 கிராம... மேலும் பார்க்க