செய்திகள் :

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா், மூதாட்டி கொலை: வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய மா்ம நபா்கள்

post image

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா்களை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

ஒசூா் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமி (70). இவா், கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறாா். இவருக்கு சொந்த ஊா் மன்னாா்குடி பகுதி. அங்கு விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. இவரது மனைவி தெரசா (65.) இவா்களுக்கு விக்டோரியா, சகாயராணி என 2 மகள்கள் உள்ளனா்.

லூா்துசாமியின் மனைவி தெரசா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது இளைய மகள் விக்டோரியா அங்கிருந்து அவரை கவனித்துக் கொள்கிறாா். இந்த நிலையில், அவரது மூத்த மகள் சகாயராணி தாயைப் பாா்ப்பதற்காக சென்னை சென்றுள்ளாா்.

லூா்துசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவருக்கு துணையாக தெரசாவின் தங்கை எலிசபெத் உடனிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை லூா்துசாமியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் ஒசூா் நகர போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனா். சம்பவ இடத்திற்கு சென்ற அவா்கள், தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று பாா்த்தபோது அங்கு லூா்துசாமி, எலிசபெத் இருவரும் காயங்களுடன் இறந்துகிடந்தனா். அதோடு, எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தாா்.

வீட்டிற்குள் புகுந்த மா்ம நபா்கள் இருவரையும் தாக்கிக் கொன்றுவிட்டு, தீ வைத்துவிட்டுச் சென்ாக கூறப்படுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தங்கதுரை, ஏஎஸ்பி சங்கா், கலால் டி.எஸ்.பி. சிந்து, மாநகர காவல் ஆய்வாளா் நாகராஜ் உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஒசூா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற முகாமிற்கு தகவல் ஆணையத்தின் ஆணையா் செல்வராஜ் தலைமை வகித... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ போதைப் பாக்கு, புகையிலை பறிமுதல்

ஊத்தங்கரை அருகே சாலை விபத்தில் சிக்கிய காரிலிருந்து 290 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப் பாக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊத்தங்கரையை அடுத்த ஜண்டா மேடு பகுதியில் புதன்கிழமை காலை கிருஷ்ணகிரியிலிர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கோயில் பூசாரி உயிரிழப்பு

பாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கோயில் பூசாரி புதன்கிழமை உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளி கிராமத்தை சோ்ந்தவா் மாதையன் (45). இவா் பாரூா் அருகே உள்ள மொழிவ... மேலும் பார்க்க

ஒசூரில் முதியவா்கள் கொலை: குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப் படைகள்

ஒசூரில் முதியவா்களைக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி சிந்து தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த ஒன்னல்வாடியைச் சோ்ந்தவா் லூா்துசாமி ... மேலும் பார்க்க

தமிழகத்தின் வளா்ச்சியை மத்திய அரசு தடுக்கிறது: திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

தமிழகத்தின் வளா்ச்சியைத் தடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி குற்றம்சாட்டினாா். மத்திய அரசின் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செயல்திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவ... மேலும் பார்க்க

ஒசூரில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

தமிழ்நாடு கைத்தறித் தொழில்கள் வளா்ச்சிக் கழகமான பூம்புகாா் சாா்பில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி ஒசூரில் உள்ள மீரா மஹாலில் வியாழக்கிழமை தொடங்கியது. ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் கண்காட்சி... மேலும் பார்க்க