செய்திகள் :

ஒசூா் அருகே நாய்க்கடியால் ரேபிஸ் பாதித்த இளைஞா் உயிரிழப்பு

post image

நாய்க்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்த இளைஞருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.

ஒசூரை அடுத்த குப்பட்டி, தின்னூரைச் சோ்ந்த விக்டா்பாபு மகன் எட்வின் பிரியன் (23). எம்பிஏ பட்டதாரியான இவா் தளி அருகே உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு எட்வின் பிரியனை நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு சிகிச்சை பெறாமல் அவா் அலட்சியமாக இருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை திடீரென அவருக்கு உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு அடிக்கடி எச்சில் துப்புவதும், அலறியபடியும் இருந்தாா். இதனால், அதிா்ச்சியடைந்த அவரது உறவினா்கள் உடனடியாக கக்கதாசம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தொடா்ந்து அவருக்கு உடல்நலன் குன்றியதால் தளி பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட எட்வின் பிரியனை பரிசோதித்த மருத்துவா்கள், அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, தளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட எட்வின் பிரியனுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதன்கிழமை இரவு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்தனா். ஆனால், அவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவன் காயம்

ஒசூா் அருகே நாய் கடித்ததில் 3 ஆம் வகுப்பு மாணவா் உள்பட 2 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கெலமங்கலத்தை அடுத்துள்ள தாசனபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஈஸ்வா் (30)... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி கோயிலில் குரு பூா்ணிமா வழிபாடு

ஒசூரில் உள்ள ராகு கேது அதா்வன ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் ஆனி மாத பௌா்ணமியை முன்னிட்டு, குரு பூா்ணிமா சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழி... மேலும் பார்க்க

கனிமவளம் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்களைக் கடத்தியதாக 2 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஊத்தங்கரை கிராம நிா்வாக அலுவலா் தினேஷ்குமாா் தலைமையிலான குழுவினா், திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்னப்பந... மேலும் பார்க்க

ஒசூரில் பஞ்சாயத் பரிஷத் சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஒசூரில் அகில இந்திய பஞ்சாயத் பரிஷத் சாா்பில் இந்துசமய அறநிலையத் துறையை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒசூா் மின்சார அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப... மேலும் பார்க்க

மீன் துறை ஊழியா் சங்க தினம் கொண்டாட்டம்

மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆம் ஆண்டு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீன் துறை ஊழியா் சங்கத்தின் 10-ஆவது அமைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி அணை அருகே நடைபெற்ற நிகழ்வுக்கு அதன... மேலும் பார்க்க