செய்திகள் :

ஒடிசாவில் கனமழையால் நிலச்சரிவு! ரயில் சேவைகள் ரத்து!

post image

ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள ஏராளமான ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு முக்கிய சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், கோராபுட் மாவட்டத்தின் ஏராளமான இடங்களில் இன்று (ஜூலை 2) நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், கோராபுட் மற்றும் ஜெய்ப்பூர் இடையிலான ரயில் பாதைகள் நிலச்சரிவினால் முடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு கடற்கரை ரயில்வே, ஜகதல்பூர் - புவனேஸ்வரம் இடையிலான ஹிராகாண்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் கிரண்டுல் - விசாகப்பட்டிணம் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களின் சேவைகளை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, கனரக இயந்திரங்களின் உதவியுடன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகளில், ரயில்வே பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கனமழையால் நெடுஞ்சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் கோராபுட் மற்றும் ராயகாடா இடையிலான சாலைப் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Heavy rains in Odisha's Koraput district have caused landslides in numerous places, severely disrupting traffic.

இதையும் படிக்க: சீன உரங்களை சார்ந்திருப்பது இந்திய விவசாயத்திற்கு அச்சுறுத்தல்!

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க

தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.என்ன நடந்தது... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி 8 நாள்கள் 5 நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாளான புதன்கிழமை கானா நாட்டுக்குச் ச... மேலும் பார்க்க

கேரள சுற்றுலாத் துறைக்கு விளம்பர மாடலான பிரிட்டன் போா் விமானம்!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரிட்டனின் எஃப்35 போா் விமானத்தை கேரள சுற்றுலாத் துறை தனது விளம்பரத்துக்காக பயன்படுத்தியுள்ளது பலரின் கவனத்தை ஈா்த்துள்ளது. கடந்த ... மேலும் பார்க்க