செய்திகள் :

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

post image

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு கூரையிலிருந்து விழுந்து பையின் கீழ் தஞ்சம் புகுந்தது.

இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பீதி தொற்றிக்கொண்டது.

உடனே அதிகாரிகள் பாம்பு பிடிக்கும் நபரின் எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த பாம்பு பிடிக்கும் நபர், மஞ்சள் நிறப் பாம்பை பிடித்தார்.

இதுகுறித்து பாம்பு பிடிக்கும் நபர் சுபேந்து மல்லிக் கூறுகையில், காலை 9.25 மணிக்கு அழைப்பு வந்த பிறகு, முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்துக்கு விரைந்து சென்று சிறிய பாம்பை மீட்டேன்.

அது ஒரு அடி மஞ்சள் நிற பாம்பு, அது காட்டில் விடப்படும் என்றார்.

பாம்பு மீட்கப்பட்டபோது பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 2,000 பேர் வளாகத்தில் இருந்தனர்.

முதல்வர் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்திற்கு வருகை தருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு அறையில் அந்த பாம்பு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

A snake was rescued from the premises where Odisha Chief Minister Mohan Charan Majhi was hearing grievances from the public on Monday morning, an official said.

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதி... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையம் செல்ல எம்.பி.க்களுக்கு சுதந்திரம் இல்லை: கே.சி. வேணுகோபால்

வாக்குத் திருட்டு மற்றும் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறைகளை எதிர்த்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாக சென்ற எதிர்க்கட்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் பொதுச் செயலர், எம்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க