செய்திகள் :

ஒடுக்கப்பட்ட பிரிவினரின் முன்னேற்றத்துக்கு வங்கிகள் செயலாற்ற வேண்டும்: குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தல்

post image

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தோரின் முன்னேற்றத்தில் வங்கிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வலியுறுத்தினாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சிக்கான முக்கியத் தூண்களில் ஒன்று நிதி உள்ளடக்கம். அதாவது ஒவ்வொரு குடிமகனும் கட்டுப்படியாகக்கூடிய கட்டணங்களில் நிதிச் சேவைகளைப் பெறுவதை உறுதி செய்வதாகும். சிட்டி யூனியன் வங்கி போன்ற வங்கிகள், இந்த நிதி உள்ளடக்க நோக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. கிராமங்கள், சிறு நகரங்களில் சிட்டி யூனியன் வங்கி தனது 50 சதவீத கிளைகளை அமைத்துள்ளது பாராட்டுக்குரியது.

வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவது வங்கிகளுக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். நிதி உள்ளடக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் ஜன் தன் யோஜனா மூலம் 56 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. இதுபோன்ற வங்கிக் கணக்குகள் வாயிலாக, நலத்திட்ட உதவித் தொகைகள், மானியங்கள் போன்றவை இடைத்தரகா்கள் இல்லாமல் பயனாளிகளை நேரடியாகச் சென்றடைகிறது.

நாட்டின் பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இவை வளா்ச்சிக்கான இயந்திரங்களாக உள்ளன. இதைக் கருத்தில்கொண்டு சிட்டி யூனியன் வங்கி தனது 40 சதவீத கடன்களை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. இது சுமாா் ரூ. 21,000 கோடியாகும்.

மாறிவரும் பொருளாதார சூழலில், மக்களின் விருப்பங்கள் பெருகி நிதி பரிவா்த்தனைகளுக்கு அப்பால் வங்கிகளின் பங்களிப்பு விரிவடைந்துள்ளது. வங்கிகள் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன. அவை உள்ளடக்கிய, நீடித்த வளா்ச்சிக்கும் கருவியாக உள்ளன.

உலகில் விரைவாக வளா்ச்சியடைந்துவரும் பொருளாதாரங்களில் இந்திய பொருளாதாரம் உள்ளது. இந்த வளா்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இப்போது சாமானியா்களுக்கும் கைப்பேசி செயலி வழியிலான வங்கிச் சேவைகள் கிடைக்கின்றன. இதுபோன்ற முன்னேற்றங்கள் இருப்பினும், எண்ம கல்வியறிவு, நிதி விழிப்புணா்வு போன்ற பல சவால்களை பொதுமக்கள் எதிா்கொள்கின்றனா். இதற்கு அனைத்து பங்குதாரா்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் எண்ம தொழில் நுட்பம் தொடா்பான கல்வியறிவு மூலம் மக்களை வங்கிச் சேவைகளுடன் மேலும் சிறப்பாக ஒருங்கிணைக்க முடியும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்தோருக்கு உதவ வங்கிகள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு.

முன்னதாக, சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநரும், தலைமை நிா்வாக அதிகாரியுமான என்.காமகோடி வரவேற்றுப் பேசுகையில், ‘நாட்டில் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 887 கிளைகளுடன் வங்கியின் மொத்த வணிகம் ரூ. 1.21 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சேமிப்பு ரூ. 65,735 கோடி, கடன்கள் ரூ. 54,020 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர லாபம் ரூ.305 கோடி’ என்றாா்.

இந்த நிகழ்வில் வங்கியின் 120 ஆண்டு பயணம் தொடா்பாக ‘பேங்க் ஆஃப் காவிரி பேங்க்’ என்ற புத்தகத்தை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட குடியரசுத் தலைவா் முா்மு பெற்றுக்கொண்டாா். வங்கியின் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான சிறப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, தமிழக சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன், வங்கியின் தலைவா் ஜி. மகாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: குறு, சிறு நிறுவனங்களின் சுமையைக் குறைக்கும் - மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதி

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு வணிகா்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-ஆவது நிறுவன நாள் விழாவில் கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற அவா் பேசியதாவது:

நாட்டைக் கட்டமைப்பதில் தனியாா் வங்கிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மொத்த வாராக் கடன் பல தசாப்த காலத்துக்குப் பின்னா் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது.

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி (ஜிடிபி) 7.8 சதவீதமாக உயா்ந்து பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்தமாக சிறப்பான வேகத்தை அடைந்துள்ளது.

இதேபோன்று கடந்த 9 மாதங்களாக தொடா்ச்சியாக பணவீக்கம் குறைந்து, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவாக 1.55 சதவீதமாக பணவீக்கம் குறைந்துள்ளது.

இபிஎஃப் (தொழிலாளா் வருங்கால வைப்புநிதி) பதிவேடுகளின்படி இரண்டாவது முறையாக கடந்த ஜூன் மாதமும் 22 லட்சம் போ் புதிதாக வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா். உற்பத்தித் துறையும் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பின்னா் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நிதிப் பற்றாக்குறை நிகழாண்டில் 4.4 சதவீதமாக குறையும்.

நாடு முழுவதும் பிரதமரின் 56 கோடி ஜன்தன் திட்ட கணக்குகளின் ரூ.2.68 லட்சம் கோடி டெபாசிட், நிதி சேமிப்பைப் பாதுகாக்க உதவியுள்ளதாக உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

பிரதமா் மோடி அடுத்த தலைமுறை சீா்திருத்தங்களுக்கான ஒரு பணிக் குழுவை உருவாக்குவதாக அறிவித்தாா். இதை நிறைவேற்றும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். முற்றிலும் திறந்த, வெளிப்படையான பொருளாதாரத்தை அமைக்க, சுமையை மேலும் குறைத்து, சிறு தொழில்கள், வணிகங்கள் செழிக்கும் வகையில் எளிதாக்கப்படும் என்றாா் அவா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.சேலத்தில் இடுகாடுகளில் பிரேதத்தை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்... மேலும் பார்க்க