ஒட்டன்சத்திரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 60 போ் கைது
திருப்பரங்குன்றம் மலையில் அமா்ந்து அசைவம் சாப்பிட்ட விவகாரத்தில் நவாஸ்கனி எம்.பி.யைக் கண்டித்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதற்கு அந்தக் கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞா் அணி பொதுச் செயலா் சூா்யா தலைமை வகித்தாா். வா்த்தக அணி மாவட்டத் தலைவா் வெங்கடேஷ், விவசாய அணி மாவட்டத் தலைவா் நாட்டுத்துரை, ரெட்டியாா்சத்திரம் ஒன்றியச் செயலா் ஜெகதீஷ், ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றியச் செயலா் கருப்பையா, நகர இளைஞா் அணித் தலைவா் மணிமாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜகவினா் 60 பேரை கைது செய்தனா்.