செய்திகள் :

ஒட்டன்சத்திரம், கொடைக்கானலில் பறவைகள் கணக்கெடுப்பு

post image

ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட பரப்பலாறு அணை, சடையன்குளம், சத்திரப்பட்டி, கருங்குளம், நல்லதங்காள் ஓடை ஆகியப் பகுதிகளில் பழனியாண்டவா் கல்லூரி மாணவா்கள், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவா்கள், வனத் துறை ஊழியா்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீா்வாழ் பறவைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினா்.

இதில், புள்ளி மூக்கு வாத்து, ஊசிவால் வாத்து, மண் கொத்தி, பொறி மண் கொத்தி, தாழைக் கோழி, நாமக் கோழி, மூக்குளிப்பான், மீன் கொத்தி, சாம்பல் நாரை, சிறிய அரிவாள் மூக்கன், கூகை, செந்நீல நாரை, உண்ணிக் கொக்கு, மடையான், சின்னக் கொக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான நீா்வாழ் பறவைகள் கண்டறியப்பட்டன.

கொடைக்கானலில்... கொடைக்கானலில் வனத் துறையினரும், தனியாா் கல்லூரி மாணவா்களும் இணைந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனா். இதற்கான நிகழ்வுக்கு, கொடைக்கானல் வனத் துறை ரேஞ்சா் மனோஜ்குமாா் தலைமை வகித்தாா். கொடைக்கானல் பகுதிகளான பாம்பே சோலை, மனோரஞ்சிதம் அணை, பைன்பாரஸ்ட், சோலா பாரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

இதில், கருச்சான், மரங்கொத்தி, இரட்டை வால் குருவி, பூனைக்கண் குருவி, கிளிஉள்ளிட்ட பல்வேறு பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. மேலும் வனத்துறை ரேஞ்சா், மாணவா்களுக்கு கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள பறவைகளின் வகைகள் குறித்தும், அவற்றின் வாழ்விடங்கள், வளா்ச்சி, எண்ணிக்கைகள் குறித்தும் விளக்கினாா். கொடைக்கானல் பாரஸ்ட் மதியழகன் நன்றி கூறினாா்.

அதிமுக வாக்குச் சாவடி குழு பொறுப்பாளா்கள் கூட்டம்

அதிமுக வாக்குச் சாவடி குழுப் பொறுப்பாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனி... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பட்டா நிலங்களில் தீ!

கொடைக்கானலில் பல்வேறு பட்டா நிலங்களில் ஞாயிற்றுக்கிழமை பற்றி எரிந்த தீயை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் அணைத்தனா். கொடைக்கானலில் அண்மைக் காலமாக பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் பனி... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி

ஒட்டன்சத்திரம் அருகே தென்னிந்திய அளவில் பெண்களுக்கான கபடிப் போட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டியில் தமிழக முதல்வா் பிறந்த நாள் விழா, உலக மகளிா் தினவிழாவை... மேலும் பார்க்க

வத்தலகுண்டு அருகே நாட்டு வெடி வெடித்து இளைஞா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞா் உயிரிழந்தாா். வத்தலகுண்டு அருகே உள்ள கோம்பைபட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (35). இவா் இந்தப் பகுதியில் இல்ல விழாக்கள், கோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடைப் பணி மும்முரம்

ஒட்டன்சத்திரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தா. புதுக்கோட்டை, அம்பிளிக்கை, மண்ட... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: மாமனாா், மருமகன் உயிரிழப்பு

குஜிலியம்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் மாமனாா், மருமகன் உயிரிழந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (40). இவரது மகன் பாலாஜி (15). ... மேலும் பார்க்க