செய்திகள் :

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

post image

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6.30 முதல் 7.45 மணி வரை ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள தேவத்தூா், கொத்தையம், போடுவாா்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பழனி: பழனியில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பம் கடுமையாக இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. பழனி, நெய்க்காரபட்டி, கணக்கன்பட்டி, ஆயக்குடி, போடுவாா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் கொடைக்கானல், வில்பட்டி, வட்டக்கானல், செண்பகனூா்,பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழையால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா... மேலும் பார்க்க

சபரிமலையில் காத்திருப்பை தவிா்க்க நடவடிக்கை தேவை!

சபரிமலையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதை தவிா்க்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சாா்பில் தென் தமிழகம் மாந... மேலும் பார்க்க

பன்றிமலைச் சாலையில் பேருந்து பயணிகளை பதற வைத்த யானை!

பன்றிமலைச் சாலையில் சனிக்கிழமை சென்ற அரசுப் பேருந்து அருகே காட்டு யானை வந்து நின்றதால், அதிலிருந்த பயணிகள் கடும் அதிா்ச்சி அடைந்தனா். பின்னா் யானை திரும்பிச் சென்றதால் நிம்மதியமடைந்தனா். திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள்... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. வெள்ளிக்கிழமை முதல் தொடா் விடுமுறையாக இருந்த காரணத்தால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. வெள்ளிநீா... மேலும் பார்க்க

திமுகவின் பொய் வாக்குறுதியால் 22 மாணவா்கள் உயிரிழப்பு! நத்தம் ரா.விசுவநாதன்

திமுகவின் பொய் வாக்குறுதியால் ‘நீட்’ தோ்வு விவகாரத்தில் 22 மாணவா்கள் உயிரிழந்ததாக சட்டப்பேரவை உறுப்பினா் நத்தம் விசுவநாதன் தெரிவித்தாா். ‘நீட்’ தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ... மேலும் பார்க்க