செய்திகள் :

ஒரே நாளில் ஏர் இந்தியாவின் 3 சர்வதேச விமானங்கள் ரத்து!

post image

ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான 3 சர்வதேச விமானங்களின் பயணங்கள் பல்வேறு காரணங்களினால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான 3 விமானங்களின் சர்வதேச பயணங்கள், தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில், 2 விமானங்களில் பயணிகள் அமர்ந்து பறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அதன் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தில்லியிலிருந்து இன்று (ஜூன் 18) டொராண்டோ செல்ல தயாரான ஏஐ 188 விமானம், பராமரிப்பு பணிகளின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல், துபாய் - தில்லி இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் காரணங்களினால் ரத்து செய்யப்பட்டதால், அதன் பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால், தில்லியிலிருந்து பாலிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், பாதுகாப்பு காரணங்களினால் நடுவழியில் மீண்டும் தில்லிக்கு திருப்பப்பட்டு பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதிக்குள்ளான பயணிகள் மீண்டும் தங்களது பயணத்தைத் தொடர்வதற்கான நடவடிக்கைகளை ஏர் இந்தியா அதிகாரிகள் மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று, அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பொயிங் 787-8 விமானம், சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில், அந்த விமானத்திலிருந்த 241 பயணிகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: ஆக.1 முதல் மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவு

மேற்கு வங்கத்தில் நிதி முறைகேடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்துமாறு மத்திய அரசுக்... மேலும் பார்க்க

இந்தியா-கனடா உறவை சீராக்க ஒப்புதல்: தூதா்களை மீண்டும் நியமிக்க முடிவு

கனனாஸ்கிஸ்: இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமா்களும் ஒப்புக் கொண்டுள்ளனா். கூடிய விரைவில் மீண்டும் தூதா்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜஸ்டின் ட்ர... மேலும் பார்க்க

பாக். தலைமைத் தளபதி - அமெரிக்க அதிபா் சந்திப்பு: இந்தியாவுக்கு பின்னடைவு! - காங்கிரஸ்

பாகிஸ்தான் தலைமைத் தளபதி ஆசிம் முனீா்- அமெரிக்க அதிபா் டிரம்ப் சந்திப்பு இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு என காங்கிரஸ் தெரிவித்தது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறியதாவது: ... மேலும் பார்க்க

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவா்கள் விமானம் மூலம் தில்லி புறப்பட்டனா்

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் தங்கிப் படித்துவந்த 110 இந்திய மாணவா்கள் புதன்கிழமை தாய்நாட்டுக்கு விமானத்தில் புறப்பட்டனா். இவா்களில் 90 போ் காஷ்மீா் பள்ளத்தாக்கைச் சோ்ந்தவா்கள் ஆவா். ஈரானில் இஸ்ரேல் தீவி... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் யாருக்கானவை? கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகள் மக்களின் பயன்பாட்டிற்கானவை அல்ல என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பெட்ரோல் நிலையங்களிலுள்ள கழிப்பறைகளை பொது பயன்பா... மேலும் பார்க்க

குரோஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

கனடாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு குரோஷியாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டு பிரதமர் ஆன்ட்ரேஜ் பிளன்கோவிக், விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று அதிகாரிகளை ஒவ்வொருவ... மேலும் பார்க்க