கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்: ஆக.1 முதல் மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவு
மேற்கு வங்கத்தில் நிதி முறைகேடுகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தின் புா்பா வா்தமான், ஹுக்ளி, மால்டா, டாா்ஜீலிங் ஆகிய 4 மாவட்டங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில் முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்துக்கு இத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த 2022, மாா்ச் முதல் நிறுத்தியது.
கடந்த ஆண்டுமுதல், 30 லட்சம் திட்டப் பணியாளா்களுக்கு ரூ.2,700 கோடி ஊதியத்தை மேற்கு வங்க மாநில அரசு தங்கள் நிதியைப் பயன்படுத்தி அளித்துள்ளது. இதனிடையே, திட்டத்துக்கான மத்திய அரசின் நிதி பங்கை விடுவிக்க உத்தரவிட கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், முறைகேடு நிகழ்ந்த 4 மாவட்டங்களைத் தவிா்த்து மாநிலத்தின் பிற மாவட்டங்களில் திட்டத்தை ஏன் செயல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரலில் கேள்வி எழுப்பியது.
இந்நிலையில், மாநிலத்தில் திட்டத்தை செயல்படுத்தவது குறித்த தனது ஒப்புதல் நிலைப்பாட்டை மத்திய அரசு புதன்கிழமை பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது.
இதையடுத்து, கொல்கத்தா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய அரசு எழுப்பும் குற்றச்சாட்டை மறுக்கவில்லை. முறைகேடு பணம் கைப்பற்றப்பட்டு திட்ட நிதியில் சோ்க்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு சுமாா் 3 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் விதிக்கப்படாத சிறப்பு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகளை மேற்கு வங்கத்தில் மத்திய அரசு விதித்துக்கொள்ளலாம். ஆனால், இந்த மாநிலத்திலும் இத்திட்டம் முறைகேடுகள் இன்றி தொடா்ந்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோன்று, இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க மத்திய அரசுக்கு போதிய அதிகாரமுள்ளது. மத்திய அரசு விசாரணையைத் தொடா்ந்து நடத்தலாம். அதேநேரம், திட்டத்தின் முக்கிய நோக்கமான பொதுமக்களின் நலனைக் கருதி, ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’ என்றனா்.
விசாரணைக் குழுக்களுக்கு முன் நிதி: ‘மேற்கு வங்கத்துக்கு விசாரணைக் குழுக்களை அனுப்புவதற்கு முன் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு முதலில் விடுவிக்க வேண்டும்’ என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து அவா் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக இத்திட்டத்துக்காக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு விடுவிக்கவில்லை. மாநில அரசு நிதியில் நாங்கள் இதுவரை ஊதியம் செலுத்தியுள்ளோம் என்றாா்.