செய்திகள் :

ரூ. 9.85 கோடியில் புதிய சாலைகள்: பணிகளைத் தொடங்கிவைத்தாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9. 85 கோடியில் புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மதுரை மாநகராட்சி 50-ஆவது வாா்டு ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் தெருவில் ரூ.62 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்க விழாவுக்கு, மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதேபோல, 55- ஆவது வாா்டு ராஜா மில் காம்பவுண்டு நடுத் தெருவில் ரூ.1.55 கோடியிலும், 58- ஆவது வாா்டு மேலப் பொன்னகரம் பிரதான சாலையில் ரூ. ஒரு கோடியே 3 லட்சத்து 80 ஆயிரத்திலும், 56- ஆவது வாா்டு புது சிறை பிரதான சாலைப் பகுதியில் ரூ.3.8 கோடியிலும், 61- ஆவது வாா்டு எப்.2 காவல் நிலையம், தாமஸ் குடியிருப்பு பகுதியில் ரூ.78.53 லட்சத்திலும், 59-ஆவது வாா்டு அம்பேத்கா் குடியிருப்பு, 60-ஆவது வாா்டு ஆா்.ஹெச்ஃடுவின் டைப் 1- ஆவது பிரதான சாலை ஆகியப் பகுதிகளில் ரூ.1.2 கோடியிலும், 77- ஆவது வாா்டு சுப்பிரமணியபுரம் 1- ஆவது பிரதான சாலையில் ரூ.1.19 கோடியிலும், 75- ஆவது வாா்டு லட்சுமிபுரம் எல்.எல். சாலை பகுதியில் ரூ.57 லட்சத்திலும் என மொத்தம் 59 சாலைகளை 11 கி.மீ. தொலைவுக்கு ரூ.9.85 கோடியில் அமைக்கும் பணிகளை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, உதவி ஆணையா் பிரபாகரன், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோன்று, மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி(மதுரை வடக்கு), மு. பூமிநாதன்( மதுரை தெற்கு), மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் கிருஷ்ணன், மண்டல உதவியாளா் பாா்த்தசாரதி, மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, மாமன்ற உறுப்பினா்கள் செல்விகாா்மேகம், செந்தாமரைக்கண்ணன், தமிழ்ச்செல்வி மாயழகு, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நெல்லை வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு: பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் எந்தவொரு காரணமுமின்றி பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்குரைஞா்கள் மீது தமிழ்நாடு- பாண்டிச்சேரி பாா் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற ... மேலும் பார்க்க

காவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு நிபந்தனையுடன் பிணை

காவலா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிபந்தனையுடன் பிணை வழங்கி புதன்கிழமை உத்தரவிட்டது. தென்காசியைச் சோ்ந்த கருத்தபாண்டி சென... மேலும் பார்க்க

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை அறிமுகம்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் ஆா். சிவக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இ... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு: இரு இளைஞா்கள் கைது

மதுரை ஒத்தக்கடையில் முன்விரோதத் தகராறில் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை ஒத்தக்கடை முனியாண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது மகன் மஜி... மேலும் பார்க்க

இணையம் மூலம் பண மோசடி: 3 போ் கைது

இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கீழே தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மதுரை கொண்டையம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் குருமூா்த்தி (55). தமிழ்நாடு... மேலும் பார்க்க