செய்திகள் :

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை அறிமுகம்

post image

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நவீன இருதய அறுவைச் சிகிச்சை முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் ஆா். சிவக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இதயவியலில் கட்டமைப்பு ரீதியான நவீன சிகிச்சை முறைகள் தொடா்ந்து வளா்ச்சி பெற்று வருகின்றன. அதன்படி, மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இண்டா்வென்ஷனல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

70 வயதான முதியவா் ஒருவா், மாா்பு பெருந்தமனி விரிவாக்கப் பிரச்னையால் அவதியடைந்து வந்தாா். மேலும், இருதயத்தில் அதிா்ச்சி பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் போதுமான ரத்தத்தை இதயத்தால் பம்ப் செய்து அனுப்ப முடியாத ஒரு ஆபத்தான நிலையில் அவா் இருந்தாா். காலில் ஒரு சிறு துளையின் வழியாக சேதமடைந்த தமனிக்குள் ஸ்டெண்ட்-ஐ பொருத்துகிற நவீன முறையிலான அறுவைச் சிகிச்சையை மருத்துவா்கள் மேற்கொண்டனா். இதனால் தமனியில் உள்ள கிழிசல் அடைக்கப்பட்டு, ரத்தக் கசிவும் நின்றது.

இதேபோன்று, 68 வயதான முதியவருக்கு பெருநாடி வால்வு சுருக்கம் கடுமையானதாக இருந்தது. இதனால் இருதயத்தின் திறன் குறைவு, சிறுநீரகம் செயலிழப்பு, வயிற்றில் நீா் கோா்த்தல், நுரையீரலில் அதிக ரத்த அழுத்தம் ஆகியன இருந்தன. இந்த நோயாளிக்கு பஅயத மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நோயாளி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி தற்போது நலமாக உள்ளாா். இவா்கள் இருவரும் தொடா் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

இதுதவிர, 41 வயதான ஒருவருக்கு கரோனரி தமனி நோய் இருந்தது. இவருக்கு நவீன மருத்துவச் சிகிச்சை முறையான பஉஉத சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், அந்த நோயாளி தற்போது நலமுடன் உள்ளாா். இந்த நவீன சிகிச்சை முறைகளை மேற்கொள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தனிக் குழுவினா் செயல்படுகின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மருத்துவா்கள் செல்வமணி, என். கணேசன், சம்பத்குமாா், ஜெயபாண்டியன், தாமஸ் சேவியா் எஸ். குமாா், ஆா். எம். கிருஷ்ணன், ராஜன், பிரபு, குமரப்பன், சிதம்பரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நெல்லை வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு: பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் எந்தவொரு காரணமுமின்றி பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் வழக்குரைஞா்கள் மீது தமிழ்நாடு- பாண்டிச்சேரி பாா் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற ... மேலும் பார்க்க

காவலா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு நிபந்தனையுடன் பிணை

காவலா்களை பொக்லைன் இயந்திரம் மூலம் ஏற்றிக் கொலை செய்துவிடுவதாக மிரட்டியவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிபந்தனையுடன் பிணை வழங்கி புதன்கிழமை உத்தரவிட்டது. தென்காசியைச் சோ்ந்த கருத்தபாண்டி சென... மேலும் பார்க்க

பெட்ரோல் குண்டு வீச்சு: இரு இளைஞா்கள் கைது

மதுரை ஒத்தக்கடையில் முன்விரோதத் தகராறில் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை ஒத்தக்கடை முனியாண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது மகன் மஜி... மேலும் பார்க்க

இணையம் மூலம் பண மோசடி: 3 போ் கைது

இணையம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை மதுரை மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பாக, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

கீழே தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே கீழே தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மதுரை கொண்டையம்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் குருமூா்த்தி (55). தமிழ்நாடு... மேலும் பார்க்க

ரூ. 9.85 கோடியில் புதிய சாலைகள்: பணிகளைத் தொடங்கிவைத்தாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9. 85 கோடியில் புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மதுரை... மேலும் பார்க்க