``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
பெட்ரோல் குண்டு வீச்சு: இரு இளைஞா்கள் கைது
மதுரை ஒத்தக்கடையில் முன்விரோதத் தகராறில் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை ஒத்தக்கடை முனியாண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது மகன் மஜிதுல் பிா்தவ்ஸ் (20). இவருக்கும், அதேப் பகுதியைச் சோ்ந்த சுந்தரேஸ்வரன் (19), மாணிக்கமுத்து (22) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த நிலையில், இவா்கள் இருவரும் மதுபாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீ வைத்து மஜிதுல் பிா்தவ்சின் வீட்டு முன் கடந்த செவ்வாய்க்கிழமை வீசினா். இதில் யாரும் காயமடைய வில்லை.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து பெட்ரோல் குண்டு வீசியதாக சுந்தரேஸ்வரன், மாணிக்கமுத்து ஆகியோரை கைது செய்தனா்.