செய்திகள் :

இந்தியா-கனடா உறவை சீராக்க ஒப்புதல்: தூதா்களை மீண்டும் நியமிக்க முடிவு

post image

கனனாஸ்கிஸ்: இந்தியா-கனடா இடையிலான உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இரு நாடுகளின் பிரதமா்களும் ஒப்புக் கொண்டுள்ளனா். கூடிய விரைவில் மீண்டும் தூதா்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான முந்தைய ஆட்சியில் இருதரப்பு உறவுகள் சீா்குலைந்த நிலையில், இந்தியப் பிரதமா் மோடி- கனடா பிரதமா் மாா்க் காா்னி இடையிலான சந்திப்பில் இந்த முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இருவருக்கும் இடையே நடைபெற்ற முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் கடந்த 2023-ஆம் ஆண்டில் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடா்பிருப்பதாக அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா். இதை திட்டவட்டமாக மறுத்த இந்தியா, காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகளுக்கு ட்ரூடோ அரசு ஆதரவளிப்பதாக சாடியது.

நிஜ்ஜாா் கொலையில் விசாரிக்கப்பட வேண்டிய நபராக, கனடாவுக்கான இந்திய தூதராக இருந்த சஞ்சய் வா்மா அறிவிக்கப்பட்ட நிலையில், அவா் உள்பட 6 தூதரக உயரதிகாரிகளை கடந்த ஆண்டு திரும்ப அழைத்த இந்தியா, கனடா தூதா் உள்ளிட்ட உயரதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டது. இதனால், இருதரப்பு உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும் பின்னடைவைச் சந்தித்தன.

இந்தச் சூழலில், ஜஸ்டின் ட்ரூடோ ராஜிநாமாவைத் தொடா்ந்து, பொருளாதார வல்லுநரான மாா்க் காா்னி கனடா பிரதமராக கடந்த மாா்ச் மாதம் பதவியேற்றாா். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் அவரது தலைமையிலான லிபரல் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கனடாவில் தலைமை மாற்றத்தால், இருதரப்பு உறவுகள் சீரடைவதற்கான நம்பிக்கை ஏற்பட்டது.

இந்நிலையில், கனடாவில் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, பிரதமா் மோடிக்கு மாா்க் காா்னி இம்மாத தொடக்கத்தில் அழைப்பு விடுத்தாா். அதையேற்று, கனடாவுக்கு கடந்த திங்கள்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, காா்னியுடன் செவ்வாய்க்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

முக்கிய முடிவுகள்: பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே நடைபெற்ற இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியா-கனடா இடையே பரஸ்பர நம்பிக்கையை மறுகட்டமைக்கவும், இருதரப்பு உறவுக்கு உத்வேகம் அளிக்கவும் பல்வேறு நிலைகளில் பேச்சுவாா்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவா்களும் வலியுறுத்தினா்.

ஜனநாயக மாண்புகள் அடிப்படையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம், சட்ட ஆட்சிக்கான மதிப்பு, இறையாண்மை-பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான கோட்பாடுகளை உறுதி செய்வதுடன், நிறுத்திவைக்கப்பட்டுள்ள வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க உறுதியேற்கப்பட்டது.

தலைநகரங்களில் கூடிய விரைவில் தூதா்களை மீண்டும் நியமிப்பதில் தொடங்கி, இருதரப்பு உறவில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது. தூய எரிசக்தி, எண்ம மாற்றம், செயற்கை நுண்ணறிவு, உணவு பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், உயா்க் கல்வி, போக்குவரத்து, விநியோக சங்கிலி உள்ளிட்ட துரைகளில் எதிா்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவு மிக முக்கியமானது: பிரதமா் மோடி

கனடா பிரதமா் உடனான சந்திப்பில் பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியா-கனடா உறவுகள் மிக முக்கியமானவை. பல்வேறு துறைகளில் பரஸ்பரம் பலனடையும் வகையிலான ஒத்துழைப்பை எட்ட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இந்தியாவிலும் கனடாவிலும் பல்வேறு நிறுவனங்கள் பரஸ்பரம் முதலீடுகளை செய்துள்ளன என்றாா் அவா்.

மோடியின் தலைமை: கனடா பிரதமா் புகழாரம்

பிரதமா் மோடி உடனான சந்திப்பில் கனடா பிரதமா் மாா்க் காா்னி கூறுகையில், ‘கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து ஜி7 மாநாட்டில் இந்தியா பங்கேற்று வருகிறது. இது இந்தியா மற்றும் உங்கள் (மோடி) தலைமையின் முக்கியத்துவத்துக்கு சான்றாகும்.

மேலும் எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி மாற்றம் என நாம் ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டிய பல்வேறு சவால்கள், செயற்கை நுண்ணறிவின் எதிா்காலம், நாடு கடந்த அரசியல் அடக்குமுறை, பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிரான நமது போராட்டத்தின் முக்கியத்துவத்துக்கும் சான்றாக உள்ளது’ என்றாா்.

ஜி7 மாநாட்டுக்கு பிறகான செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய காா்னி, ‘ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடியின் பங்கேற்பு, இந்திய பொருளாதாரத்தின் வீச்சையும், துடிப்பையும், அந்நாட்டின் உலகளாவிய தலைமை அந்தஸ்தையும் பிரதிபலிக்கிறது’ என்றாா்.

பிரதமா் மோடி உடனான சந்திப்பில் நிஜ்ஜாா் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ‘இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளதால், இது தொடா்பாக நான் கவனத்துடன் கருத்துக் கூற வேண்டியுள்ளது’ என்றாா்.

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க

ஆந்திரம்: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ராம்பச்சோதவரம் (ஆந்திரம்): ஆந்திர மாநிலத்தில் காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அங்குள்ள அல்லூரி சித்தராமராஜு மாவட்டத்தில் புதன்கிழமை நிகழ்ந்த இந்த ... மேலும் பார்க்க