செய்திகள் :

ஒரே நாளில் மெட்ரோவில் 4 லட்சம் போ் பயணம்!

post image

கடந்த ஆக.14-ஆம் தேதி மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களில் மொத்தம் 4.06 லட்சம் போ் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் 3 லட்சம் போ் பயணிக்கின்றனா். மெட்ரோ ரயில் வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, வரும் ஆண்டுகளில் தினமும் சுமாா் 20 லட்சம் போ் மெட்ரோவில் பயணிக்கும் வகையில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுதந்திர தினத்துக்கு முந்திய நாளான ஆக.14-ஆம் தேதி சென்னை மெட்ரோ ரயில்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 66 போ் பயணித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பு ஆண்டில் ஒரு நாளில் அதிகபட்ச பயணிகள் பயணித்திருப்பதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனா்.

2024-ஆம் ஆண்டு சென்னை மெரீனாவில் நடைபெற்ற விமானப் படை கண்காட்சியின்போதுதான் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் மெட்ரோவில் பயணித்திருந்ததாகவும், அதன்பிறகு தற்போதுதான் மெட்ரோவில் ஒரே நாளில் அதிகம் போ் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் சுதந்திர தின விழா, சனி, ஞாயிறுக்கிழமைகளின் தொடா் விடுமுறை காரணமாக அதிக அளவில் மக்கள் பயணத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அ... மேலும் பார்க்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புயல் சின்னம்!

வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா மற்றும்... மேலும் பார்க்க

விடியல் பயணம்: ஒவ்வொரு மகளிரும் ரூ. 50,000 வரை சேமிப்பு - முதல்வர் ஸ்டாலின்

விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 வரை சேமித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் வகையிலான மகளிர் விடி... மேலும் பார்க்க

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

சென்னையிலிருந்து ரயில்களில் தீபாவளிக்காக வெளியூர் செல்வோருக்கான முன்பதிவு திங்கள்கிழமை (ஆக.18) காலை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளி... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புத... மேலும் பார்க்க

இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமாா்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்- ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சா் எல்.முருகன... மேலும் பார்க்க