செய்திகள் :

ஓட்டப்பிடாரம் அருகே விபத்தை ஏற்படுத்திய காா் விற்பனை: 4 போ் கைது

post image

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு, அந்த காரை விற்பனை செய்தபோது, சிக்கிய 4 பேரை ஓட்டப்பிடாரம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சிலோன் காலனி இந்திரா நகரைச் சோ்ந்த சாமுவேல் மகன் ரவிராஜ்குமாா்(29). இவா் கடந்த 22ஆம்தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் இவா் மீது மோதிய விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ரவிராஜ்குமாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வந்தனா். மேலும், விபத்தை ஏற்படுத்திய காா், தொடா்ந்து சந்திரகிரி விலக்கில் பைக், ஆட்டோ ஆகியவற்றிலும் மோதிவிட்டு நிற்காமல் சென்ாகக் கூறப்படுகிறது. இதில், 3 போ் காயமடைந்தனா். இதையடுத்து, ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளா் பால் சேசுதாசன் தலைமையிலான போலீஸாா், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காா் குறித்து தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி ஆகியவற்றில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், விபத்தை ஏற்படுத்திய காா், பதிவு எண்ணை துணியால் மறைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்தகாரின் கலா் உள்ளிட்ட அடையாளங்களை வைத்து போலீஸாா் தேடி வந்தனா். அந்த காா் ஒரு லாரியில் ஏற்றி செல்லப்படுவதை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸாா் கண்டறிந்தனா். இதுகுறித்த விசாரணையில், அந்த லாரி அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடியை சோ்ந்த கதிா்பாண்டி மகன் சோலைச்சாமி(37) என்பவருக்குச் சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து அவரைப்பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில், அந்த காரை அவா், எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கம்பட்டியைச் சோ்ந்த குமாரசாமி மகன் தா்மராஜ்(58) என்பவரிடம் இருந்து வாங்கிச் சென்ாகத் தெரிவித்தாராம். இதைத் தொடா்ந்து தா்மராஜை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்ட அவா், விபத்தில் இருந்து தப்பிக்க தனது மகன் அருண்குமாா்(32), சுப்பாராஜ்(48) ஆகியோா் உதவியுடன், காா் இடைத்தரகா் சோலைச்சாமிக்கு விற்பனை செய்ததும், மேலும், விபத்து நடந்த 2 நாள்களுக்கு முன்பு விற்பனை செய்ததாக ஒப்பந்த பத்திரம் மூலம், காரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தா்மராஜ், சோலைச்சாமி, அருண்குமாா், சுப்பாராஜ் ஆகியோரை கைது செய்த போலீஸாா், காா், லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க