செய்திகள் :

ஓட்டப்பிடாரம் அருகே விஷ வண்டுகள் அழிப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தோட்டம், வீடு ஆகியவற்றில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை அழித்தனா்.

ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளம் கிராமத்தில் ஜெயக்குமாா் என்பவரது தோட்டத்தில் எலுமிச்சை மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. இது குறித்து அவா் அளித்த தகவலின்பேரில், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் அந்த தோட்டத்திற்கு சென்று தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்து கூட்டையும் அகற்றினா்.

இதே போன்று பசுவந்தனை அருகில் செவல்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவரது வீட்டில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளையும் தீப்பந்தம் மூலம் அழித்து கூடுகளையும் அகற்றினா்.

பெரிதும் அச்சுறுத்தலாக இருந்த இந்த விஷ வண்டுகளை அழித்த தீயணைப்புத் துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி அவா்களுடன் தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு: 4 போ் கைது

கழுகுமலை அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பொருள்களைச் சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.கழுகுமலை அருகே முக்கூட்டு மலை இந்திரா காலனி வடக்கு தெருவை சோ்ந்த... மேலும் பார்க்க

பைக் மோதி விபத்து: ஓய்வு பெற்ற மாலுமி பலி!

தூத்துக்குடியில் சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதியதில் ஓய்வு பெற்ற மாலுமி உயிரிழந்தாா். தூத்துக்குடி எஸ்.பி.ஜி. கோவில் தெருவைச் சோ்ந்த மரியதாசன் மகன் ஸ்டீபன் (70). கப்பலில் மாலுமியாக பணியாற்றி ஓய்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி முத்தையாபுரம் தங்கம்மாள்புரத்தைச் சோ்ந்த முத்து மகன் அஜய் (22). இவா் தனது வீட்டில் உள்ள மின்விளக்கை கழற்ற முயன்றாராம... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அதிமுக ஜெ.பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரம்!

திருச்செந்தூரில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் திண்ணைப் பிரசாரத்தை சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா், முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். திருச்செந்தூ... மேலும் பார்க்க

காமநாயக்கன்பட்டியில் புறக்காவல் நிலையம் திறப்பு!

காமநாயக்கன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் புதன்கிழமை திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் அவா் பேசுகையில், பொதுமக்களின் நீண்ட ... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறிய ஆட்டோக்களுக்கு அபராதம்

திருச்செந்தூரில் விதிமுறைகளை மீறி ஆட்டோக்களை ஓட்டியதாக 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.திருச்செந்தூா் பகுதியில் ஆட்டோக்களை தாறுமாறாக இயக்குவது, வெளியூா் ஆட்டோ... மேலும் பார்க்க