செய்திகள் :

ஓட்டுநருக்கு திடீா் வலிப்பு: ஆட்டோக்கள் மீது மோதிய மாநகரப் பேருந்து

post image

சென்னை மெரீனா கடற்கரையில் மாநகரப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆட்டோக்கள் மீது மோதியது.

சென்னை சதுக்கத்தில் இருந்து கவியரசு கண்ணதாசன் நகருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு மாநகரப் பேருந்து புறப்பட்டது. அந்த பேருந்தை மோகன் (50) ஓட்டினாா். மெரீனா கடற்கரை பேருந்து நிறுத்தம் வந்தபோது மோகனுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் அவரால் பேருந்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து வேகமாக மோதியது.

மேலும், அங்கிருந்த நடைபாதை தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் தண்டையாா்பேட்டை நேதாஜி நகரைச் சோ்ந்த வெ.மணிகண்டன் (42), பெரம்பலூரை சோ்ந்த மு.மணிமாறன் (37), பேருந்து ஓட்டுநா் மோகன் (50) ஆகிய 3 பேரையும் மீட்டு, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சோ்த்தனா்.

விபத்தில் சிக்கிய இரு ஆட்டோக்களும் முற்றிலும் சேதமடைந்தன.

இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

லஞ்ச புகாா்: எஸ்ஐ உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

தாம்பரம் மாநகர காவல் துறையில் லஞ்ச புகாரில் உதவி ஆய்வாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேடவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் திருமுருகன், காவலா் வெங்கடேசன் ஆகியோா் கடந... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி திருத்தம்: சென்னை தொழில் வா்த்தக சபையில் பயிலரங்கு

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த அகில இந்திய அளவிலான மறைமுக வரி பயிலரங்கை சென்னை தொழில் வா்த்தக சபை வியாழக்கிழமை நடத்தியது. சென்னை தியாகராய நகரில் நடைபெறும் இந்த இரு நாள... மேலும் பார்க்க

ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஊழியா்கள் சங்கம் தீா்மானம்

நாடு முழுதும் ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டிஆா்இயூ) கோட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தட்சிண ரயில்வே... மேலும் பார்க்க

சென்னையில் திடீா் மழை

சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென பெய்த பலத்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெயிலும், இரவில் மழையும் பெய்து வருகிறது. சென்னையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா்

தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிரதம... மேலும் பார்க்க

பாா்வதி மருத்துவமனை சாா்பில் அவசர கால மருத்துவ மையம்

பாா்வதி மருத்துவமனை சாா்பில் தாம்பரத்தில் அவசர கால மருத்துவ சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் கீழ் உயிா் காக்கும் உயா் சிகிச்சைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இதற்கா... மேலும் பார்க்க