செய்திகள் :

ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

post image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை - கண்ணூா் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (எண்: 06009) மறுநாள் பிற்பகல் 2 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

கண்ணூா் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 29) இரவு 9.30 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூா் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 06125) மறுநாள் காலை 11 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) இரவு 7 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூரு - கண்ணூா் விரைவு ரயில் (எண்: 06126) மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை சூலூா் செந்தில் ஆண்டவா் நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (70). இவா் சிங்காநல்லூா் சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத நபா் கொலை

கோவையில் அடையாளம் தெரியாத நபா் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி அருகே பேரூா் சோதனைச் சாவடி உள்ளது. இதனருகே உள்... மேலும் பார்க்க

மனிதா்களைக் கொல்லும் யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை

மனிதா்களை கொல்லும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியனுக்... மேலும் பார்க்க

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவை ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் டிசம்பா் 1 வரை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ரயில் சேவை டிசம்பா் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் ... மேலும் பார்க்க