செய்திகள் :

ஓணம் பண்டிகை: விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு பறக்கும் பூக்கள்!

post image

கேரள மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, விவசாய அறுவடை மற்றும் குடும்ப ஒன்றிணைப்பை கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அமைந்துள்ளளது.

இதையொட்டி கோயம்புத்தூரில் இருந்து டன் கணக்கான பூக்கள் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.

இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ஓணம் பண்டிகைக் கொண்டாடப்படவிருக்கிறது. இதற்கு 10 நாள்களுக்கு முன்னதாகவே ஓணம் கொண்டாட்டம் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தொடங்கி விட்டது.

வெளிநாடுகளுக்கு அனுப்ப விமான நிலையம் வந்திருக்கும் பூக்களில் தங்க மஞ்சள் சாமந்தி, வெண் கிரிஸான்தமம், ஊதா வாடாமல்லி, வெள்ளை சம்பங்கி, துளசி, ரோஜா, மதுரை மல்லி உள்ளிட்ட பல்வேறு வகைப் பூங்கள் அடங்கும்.

இந்த பூக்கள் ஓணத்தின் முக்கிய பாரம்பரியமாக உள்ள பூக்கோலங்கள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து நேந்திரம் மற்றும் பல்வேறு பழங்களும் கேரளாவுக்கு அனுப்பப்படுவதால், ஓணம் பண்டிகை கலைக்கட்டி உள்ளது.

வழக்கமாக, ஓணம் பண்டிகையின்போது பல டன் மலர்களும் பழங்களும் தமிழகத்தின் ஒரு சில விமான நிலையங்களிலிருந்தும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பல உலக நாடுகளுக்கும் ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இரவில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள... மேலும் பார்க்க

பிரதமர் மோடி ‘விஸ்வகுரு’ என்றால் ட்ரம்ப்புடன் பேசி தீர்வு காணலாமே! -முதல்வர் ஸ்டாலின்

அமெரிக்க அரசின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (செப். 2) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதி... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு திமுக அரசால் துரோகம்: எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை மதுரை மேலூரில் இன்று எட... மேலும் பார்க்க

பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்? உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். குடியரசுத்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு அனுமதி!

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. பணிநிரந்தரம் கோரி கடந்த மாதம் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியா... மேலும் பார்க்க

திருச்சி கோட்டத்தில் பொறியியல் பணிகளால் ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்!

திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொ... மேலும் பார்க்க