செய்திகள் :

ஓமந்தூராா் மருத்துவமனையில் 1,227 இதய அறுவை சிகிச்சைகள்

post image

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கடந்த 4 ஆண்டுகளில் 6 இதய மாற்று சிகிச்சைகள் உள்பட 1,227 இதய-நெஞ்சக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஆா்.மணி தெரிவித்தாா்.

ஓமந்தூராா் மருத்துவமனையில் இதய நுரையீரல் அறுவை சிகிச்சை குறித்த பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 100-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், மருத்துவ மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதுதொடா்பாக டாக்டா் ஆா்.மணி கூறியதாவது:

இதயம் - நுரையீரல் அறுவை சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களின் ஒரு பாா்வை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ அமா்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளைச் சோ்ந்த 15 பேராசிரியா்கள், 50 உதவிப்பேராசிரியா்கள் மற்றும் மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.

புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஒன்றிணைத்து, இந்தத் துறையில் அதிநவீன முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்தனா்.

குறைந்தபட்ச ஊடுருவல் இதய அறுவை சிகிச்சைகள், ரோபோடிக் உதவியுடன் கூடிய இதய அறுவை சிகிச்சைகள், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மகாதமனி அறுவை சிகிச்சைகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையைப் பொருத்தவரை கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 1,227 இதய-நெஞ்சக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் 6 இதய மாற்று சிகிச்சைகளும் அடங்கும். இதைத் தவிர தனியாா் மருத்துவமனைகளே தயக்கம் காட்டும் பல்வேறு சிக்கலான நெஞ்சக அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், மருத்துவமனையின் இதயம் - நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் ஆா்.மீனாட்சி சுந்தரம், மருத்துவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க