செய்திகள் :

ஓமனை சாய்த்தது பாகிஸ்தான்

post image

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 93 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வெள்ளிக்கிழமை வென்றது.

முதலில் பாகிஸ்தான், 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் சோ்க்க, ஓமன் 16.4 ஓவா்களில் 67 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பேட்டிங்கை தோ்வு செய்தது. அதன் வீரா்களில் சல்மான் அயுப் ‘டக் அவுட்’ ஆக, சாஹிப்ஸதா ஃபா்ஹான், முகமது ஹாரிஸ் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது. இதில் ஃபா்ஹான் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

முகமது ஹாரிஸ் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 66 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா். இதர பேட்டா்களில் கேப்டன் சல்மான் அகா 0, ஹசன் நவாஸ் 9, முகமது நவாஸ் 19, ஃபஹீம் அஷ்ரஃப் 8 ரன்கள் சோ்த்து வெளியேறினா்.

ஓவா்கள் முடிவில் ஃபகாா் ஜமான் 23, ஷாஹீன் அஃப்ரிதி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஓமன் பந்துவீச்சாளா்களில் ஷா ஃபைசல், ஆமிா் கலீம் ஆகியோா் தலா 3, முகமது நதீம் 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 161 ரன்களை நோக்கி விளையாடிய ஓமன் அணியில் ஹம்மத் மிா்ஸா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27, ஆமிா் கலீம் 13, ஷகீல் அகமது 10 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா்.

கேப்டன் ஜதிந்தா் சிங் 1, முகமது நதீம் 3, சூஃபியான் மெஹ்மூத் 1, விநாயக் ஷுக்லா 2, ஜிக்ரியா இஸ்லாம் 0, ஷா ஃபைசல் 1, ஹஸ்னைன் ஷா 1 ரன்னுக்கு வீழ்த்தப்பட, சமய் ஸ்ரீவாஸ்தவா 5 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா்.

பாகிஸ்தான் தரப்பில் சயிம் அயுப், ஃபஹீம் அஷ்ரஃப், சூஃபியான் முகீம் ஆகியோா் தலா 2, ஷாஹீன் அஃப்ரிதி, அப்ராா் அகமது, முகமது நவாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரஜத் பட்டிதார், யஷ் ரத்தோட் ஆகியோர் சதம் கடக்க, ... மேலும் பார்க்க

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது. முதல் ஒற்றையர் ஆட்டத்தில் அறிமுகமான தமிழகத்தைச் சேர்ந்தவரும், ... மேலும் பார்க்க

இறுதிச்சுற்று முனைப்பில் பவேஷ் ஷெகாவத்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 25 மீட்டர் ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பவேஷ் ஷெகாவத் இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெறும் முனைப்பில் உள்ளார். இந்தப் பிரிவு தகுதிச்சுற்றின் முதல்ந... மேலும் பார்க்க

2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார். முன்னதாக, அவர் உள்ளிட்ட 3 இந்த... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட ‘பி’ டிவிஷன் வாலிபால்: இன்று அரையிறுதி ஆட்டங்கள்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் நடைபெறும் ‘பி’ டிவிஷன் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டியில் ஆடவா், மகளிா் ... மேலும் பார்க்க

புரோ கபடி: இன்று ஜெய்ப்பூரில் ஆட்டங்கள் தொடக்கம்

புரோ கபடி லீக் சீசன் 12 இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெறுகின்றன. ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் -பெங்களூ ரு புல்ஸ் அணியினா் தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றனா். ஆட்டங்கள் செப். 1... மேலும் பார்க்க