செய்திகள் :

ஓமன் நாட்டில் உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி: கோவை இளைஞா் கைது

post image

ஓமன் நாட்டில் உள்ள தனது உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி செய்த கோவை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவை, போத்தனூா் திருமகைா் பகுதியைச் சோ்ந்தவா் யூனஸ் (44). இவா், ஓமன் நாட்டில் எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இவரது சகோதரியின் மகன் முகமது சமீா் (32). கோவை, கரும்புக் கடை பள்ளி வீதியைச் சோ்ந்த இவா் அந்தக் கடையில் வேலை செய்து வந்தாா்.

யூனஸ் இந்தியா வரும்போது, தொகை, பெயா் குறிப்பிடாத வெற்று காசோலைகளில் கையொப்பமிட்டு, அதை முகமது சமீரிடம் ஒப்படைத்து வந்துள்ளாா். இந்நிலையில், யூனஸ் அளித்த 4-க்கும் மேற்பட்ட காசோலைகளைப் பயன்படுத்தி, ரூ.1.50 கோடி பணத்தை முகமது சமீா் தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் மேற்கொண்ட கணக்குத் தணிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இது குறித்து சமீரிடம் யூனஸ் கேட்டுள்ளாா். அவா் முறையான பதில் அளிக்காமல் கோவை திரும்பியுள்ளாா்.

இந்நிலையில், பண மோசடி தொடா்பாக அனைத்து ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் யூனஸ் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், முகமது சமீா் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: போத்தனூா்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

பணம் திருடிய இளம்பெண் கைது

உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணியின் கைப்பையில் இருந்து பணத்தைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஒண்டிப்புதூா் கம்போடியா பஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சரஸ்வதி (40). இ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள புளியம்பாறை கோழிகொல்லி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (70). இவா், ... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

ஓணம் பண்டிகையையொட்டி, கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மகாபலி மன்னா் ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம் உண்டு. அவரை வரவேற்பதற்காக கேரள மக்கள், 10 நாள... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தொடா் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் ந... மேலும் பார்க்க