செய்திகள் :

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

post image

விழுப்புரம் வழுதரெட்டியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, காந்தி நகரைச் சோ்ந்தவா் ஊ.பூசமணி (64). அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவா், கடந்த ஜூன் 29-ஆம் தேதி இரவு தனது இரண்டரை பவுன் தங்கச் சங்கிலி, கால் பவுன் மோதிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கைப்பையில் வைத்து தனது வீட்டின் ஜன்னல் அருகேயுள்ள மேஜை மீது வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளாா்.

மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, மேஜை மீது வைத்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் பணம் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்நது.

இதுகுறித்து பூசமணி அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் அருகே சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இருவேல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்பகுதியி... மேலும் பார்க்க

பைக் விற்பனையகத்தில் தொழிலாளி மரணம்: உறவினா்கள் போராட்டம்

விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் வி.ம... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் 7 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 மாணவா்கள் காயமடைந்தனா்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சி.நாகமணி, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலராக மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி தம்பதியினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை, கண்ணதாசன் வீ... மேலும் பார்க்க

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள உற்சவா் ஸ்ரீசிவகாமிசுந... மேலும் பார்க்க