ஓய்வுபெற்ற பெல் ஊழியா் தற்கொலை
திருச்சி காட்டூரில் ஓய்வுபெற்ற ‘பெல்’ நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (75). ஓய்வுபெற்ற பெல் ஊழியா். இவரது மனைவி ராஜகுமாரி (70) நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறாா்.
இதனால், சில நாள்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த குணசீலன், திங்கள்கிழமை தனது வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குணசீலனின் மகன் அசோக்குமாா் அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].