செய்திகள் :

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

post image

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் தொழில்நுட்பம் தொடர்பான சர்ச்சை எழுந்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் இங்கிலாந்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது.

டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

இங்கிலாந்தைக் காட்டிலும் 23 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வருகிறது.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது, 13-வது ஓவரில் ஜோஷ் டங்கின் பந்துவீச்சில் சாய் சுதர்சன் தடுமாறி கீழே விழுந்தார். பந்து பேடில் பட்டதால் இங்கிலாந்து வீரர்கள் நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டனர். கள நடுவரான குமார் தர்மசேனா அவுட் கொடுக்க மறுத்து, பந்து பேட்டில் பட்டதாக சமிக்ஞை செய்தார்.

அவர் சமிக்ஞை செய்தது ஃபீல்டிங்கில் இருந்த இங்கிலாந்து அணிக்கு நடுவரின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செல்லலாமா? வேண்டாமா? என்பதற்கு உதவுவது போன்று இருந்ததால், அவரது சைகை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக முன்னாள் நடுவர் அனில் சௌதரி பேசியதாவது: கள நடுவரின் சைகை எதிரணிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறமாட்டேன். சில நேரங்களில் இது போன்று நடக்கும். ஆனால், சர்வதேசப் போட்டிகளில் நடுவரின் முடிவை மேல்முறையீடு செய்யும் டிஆர்எஸ் தொழில்நுட்பம் இருப்பதால், நடுவர் 15 விநாடிகளுக்கு எந்த ஒரு சைகையும் செய்யக் கூடாது.

ஓவல் டெஸ்ட்டின்போது, கள நடுவருக்கு ஏதோ ஆகியுள்ளது. ஆனால், இதுபோன்று நடந்திருக்கக் கூடாது. டிஆர்எஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் போட்டிகளில் நடுவர்கள் சைகைகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில், அது உதவுவது போன்ற செயலாக மாறிவிட வாய்ப்பிருக்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ இதுபோன்ற விஷயங்கள் எப்போதும் நடக்கக் கூடாது என்றார்.

இதையும் படிக்க: ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

Controversy arose regarding the DRS technology in the last Test match between India and England.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 21 ரன்களில் டெஸ்ட் போட்டிகளில் மிகப் பெரிய சாதனை படைப்பதை தவறவிட்டுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில... மேலும் பார்க்க

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்... மேலும் பார்க்க

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

இந்திய சுழல்பந்து வீச்சாளர் சஹால் விவாகரத்து குறித்து பேசும்போது தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். சஹாலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர... மேலும் பார்க்க

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஜோ ரூட்டை வம்பிழுத்தது தங்களது திட்டங்களுல் ஒன்றாக இருந்தது எனக் கூறியுள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் 2-1 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. க... மேலும் பார்க்க

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

ஆப்கன் வீரர் உஸ்மான் கனி ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில் இசிஎஸ் டி10 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் லண்டன் கவுன்டி கிரிக்கெட் அணியும் கில்ட்ஃபோர்டு அணியும் மோ... மேலும் பார்க்க