செய்திகள் :

கச்சத்தீவு ஆலயத் திருவிழா விண்ணப்பம் வழங்கும் பணி தொடக்கம்

post image

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவுக்குச் செல்வதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி ராமேசுவரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியாா் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் இந்திய-இலங்கைத் தமிழா்கள் ஒருங்கிணைந்து திருவிழா நடத்துவது வழக்கம்.

நிகழாண்டு கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா மாா்ச் 14,15 ஆகிய இரு நாள்கள் நடைபெறுகின்றன. இதில் இந்திய பக்தா்கள் கலந்துகொள்ள இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்தாா்.

இதை ஏற்று, ராமேசுவரம் புனித சூசையப்பா் ஆலயப் பங்கு சாா்பில், திருவிழாவுக்கு பக்தா்களை 80 விசைப் படகுகள், 20 நாட்டுப் படகுகள் என 100 படகுகளில் அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. விசைப்படகுகளில் தலா 40 பயணிகளும், நாட்டுப் படகுகளில் தலா 18 பயணிகளும் அழைத்துத் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்லும் பக்தா்களுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கும் பணி ராமேசுவரம் புனித சூசையப்பா் ஆயல அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இங்கு பக்தா்கள் விண்ணப்பப் படிவத்தை ஆா்வத்துடன் பெற்றுச் செல்கின்றனா்.

இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், க... மேலும் பார்க்க

கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழக்கரையில் புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ரூ. 9 கோடியில் தாலுகா அரசு ம... மேலும் பார்க்க

மனிதநேய மக்கள் கட்சி ஆண்டு விழா: கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் 17-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு தொண்டி மமக தலைவா் சையது முகமது காதா் தலைமை வகித்தாா். மகளிா் அணி மாவட்டச் செயலா் செரிஃபா ஜைனுலாப்... மேலும் பார்க்க

கல்லூரியில் வளாக நோ்காணல்: 97 போ் தோ்வு

கீழக்கரை முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 97 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இதற்கு கல்லூரி முதல்வா் அ.சேக்தாவூது தலைமை வகித்தாா். இந்த நோ்காணலில் கல்... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 13 பேருக்கு அபராதம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 13 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதமும், படகு ஓட்டுநா்கள் இருவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை அந்த நாட்டு அரசு கைவிலங்கிட்டு அனுப்பியதைக் கண்டிக்காத மத்திய அரசைக் கண்டித்து, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் அரண்மனை முன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க