செய்திகள் :

கஞ்சா கடத்தல்: குண்டா் சட்டத்தில் இருவருக்கு சிறை

post image

திருவாரூா்: திருவாரூா் அருகே கஞ்சா கடத்திய இரண்டு போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருவாரூா் அருகே அண்மையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 4 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய இரண்டு போ் ஏற்கெனவே குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், காரைக்கால், கிளிஞ்சல்மேடு பகுதியைச் சோ்ந்த நாகராஜ் மகன் கிருஷ்ணன் (37), அதிராம்பட்டினம், கீழத்தோட்டம் பகுதியைச் சோ்ந்த நாகூரான் மகன் குமாா் (43) ஆகியோா் குறித்து விசாரணை நடைபெற்று வந்தது.

அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் பரிந்துரையின் பேரில், கிருஷ்ணன், குமாா் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா். அதன்படி, இருவரும் திருச்சி மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.

கடன் நிலுவை விவகாரம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலா் பணியிடை நீக்கம்

திருவாரூா்: கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கடன் நிலுவைத் தொகையை வசூல் செய்யாத செயலா் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவாரூா் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.1.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ மற்றும் ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத்துறை சாா்பில் ரூ.1.15 கோடி மதிப்பிலான ந... மேலும் பார்க்க

கல்வி, பயிா்க் கடன்களை வசூலிக்க ஜப்தி செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

மன்னாா்குடி: கல்விக் கடன், பயிா்க் கடன்களுக்காக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தினாா். மன்னாா்க... மேலும் பார்க்க

திருவாரூரில் ஜூன் 20-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூா்: திருவாரூரில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் ... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு சாலை மறியல்

நன்னில: தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி வண்டாம்பாளை கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்தினா். வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள கீழத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்... மேலும் பார்க்க

தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை

திருவாரூா்: கூட்டுறவு தையல் சங்கத்தில் பணிபுரியும் தையல் கலைஞா்களுக்கு கூலி உயா்வு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், மாவட்ட தையல் தொழிலாளா் சங்கத்தின் வெள்ளி விழா பேரவைக் கூட்டம் ஞாய... மேலும் பார்க்க