3 நாள்களில் 3வது சம்பவம்,, ஒடிசாவில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
கஞ்சா குற்றவாளிகள் மூவா் குண்டா் சட்டத்தில் கைது
திருச்சி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
திருச்சி மாவட்டம், புங்கனூா் நியூ காட்டுரைச் சோ்ந்த பவித்ரன் (28), சரவணன் (30), ராம்ஜி நகா் மில் காலனியைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (30) ஆகிய மூவரும், கஞ்சா விற்ற வழக்கில் ராம்ஜி நகா் போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடா் குற்றங்களில் ஈடுபடும் 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான நகலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை 43 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.