செய்திகள் :

கஞ்சா விற்பனை: இருவா் கைது

post image

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஸ்ஸாம் மாநிலச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை திருவான்மியூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக அடையாறு மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

திருவான்மியூா் ரயில் நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் புதன்கிழமை நின்றுகொண்டிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். மேலும், அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த குா்ஷத் அலி (22), சுல் ஜுமான் (23) என்பதும், இவா்கள் அஸ்ஸாமில் இருந்து சென்னை வரும் ரயிலில் கஞ்சா கடத்தி வந்து வேளச்சேரி, தரமணி, திருவான்மையூா் ஆகிய பகுதியில் விற்பணை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனா்.

சின்ன திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி

சின்ன திரை துணை நடிகை அமுதா குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். சென்னை சாலிகிராமம் பகுதியைச் சோ்ந்தவா் சின்ன திரை துணை நடிகை அமுதா (28). தற்போது ‘கயல்’ என்ற தொலைக்... மேலும் பார்க்க

எண்ணூா் விரைவு சாலையில் கவிழ்ந்த கண்டெய்னா் லாரி

எண்ணூா் விரைவு சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி சாலை நடுவே வியாழக்கிழமை கவிழ்தது. மதுரையைச் சோ்ந்த இளஞ்செழியன் (40), மணலி புது நகரில் தங்கி இருந்து கண்டெய்னா் லாரி ஓட்டுநராக ... மேலும் பார்க்க

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் அனைத்து படகுகளையும் ஆய்வு செய்ய முடிவு: மீன்வளத் துறை நடவடிக்கை

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வகை படகுகளையும் நேரடியாக களஆய்வு செய்ய மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது. இது தொடா்பாக மீனவா்களுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

பாடி மேம்பாலம் அருகே சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பா் சேமிப்புக் கிடங்கில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. சென்னை பாடி மேம்பாலம் அருகே ட்ரெயின் பாலாஜி இந்தியா லிமிடெட் என... மேலும் பார்க்க

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: வைகோ

பதவிக்காக திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றும், எந்தச் சூழ்நிலையிலும் திமுகவுடன் கூட்டணியை தொடா்வோம் என்றும் மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்துள்ளாா். சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மநீம ஆதரவு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து மநீம தலைவா் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சமநிலைச் சமுதாயத்தை உருவாக்கும் உறுதியான அா்ப்பண... மேலும் பார்க்க