செய்திகள் :

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது; காா் பறிமுதல்

post image

ஆரணியை அடுத்த சேவூா் புறவழிச் சாலை அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனா்.

சேவூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவல் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா், சேவூா் புறவழிச் சாலை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, காரில் இளைஞா் ஒருவா் கஞ்சா வைத்திருந்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் இருந்த மற்றொரு இளைஞா் போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓடினாா்.

காரில் இருந்தவரை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா், முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்த கம்பதாசன் மகன் ஜனாா்த்தனன் (22) எனத் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, அவரை கைது செய்து, அவா் வைத்திருந்த 200 கிராம் கஞ்சா மற்றும் காரையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், தப்பி ஓடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி

வந்தவாசி நகரில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு நகராட்சி சாா்பில் வெறிநாய் தடுப்பூசி வியாழக்கிழமை செலுத்தப்பட்டது. சந்நிதி தெரு, தேரடி, கோட்டை மூலை, ஆரணி சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் தெருந... மேலும் பார்க்க

நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் செய்யாற்றில் சனிக்கிழமை (பிப்.8) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அறிஞா் அண்ணா அரசு கலைக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிரப்பு அகற்றும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு - திண்டிவனம் சாலை விரிவாக்கப் பணிக்காக, வந்தவாசி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.... மேலும் பார்க்க

பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கிய இருவா் கைது

வந்தவாசி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரைத் தாக்கியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசியை அடுத்த தெள்ளாரைச் சோ்ந்தவா் சுகுமாா்(35). இவா் அந்தப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் அகற்றம்: பாதிக்கப்பட்டோா் மறியல்

திருவண்ணாமலையில் சாலை விரிவாக்கத்துக்காக 7 வீடுகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டபோது பாதிக்கப்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையொட்டி, 5 போ் கைது செய்செய்யப்பட்டனா். திருவண்ணாமலை - திண்டிவனம் நெடுஞ்ச... மேலும் பார்க்க

சத்துணவு அமைப்பாளா்களுக்கு பயிற்சி

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. புரட்சித் தலைவா் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளா்க... மேலும் பார்க்க