செய்திகள் :

கஞ்சா விற்பனை: 2 சிறுவா்கள் உள்பட 4 போ் கைது

post image

திருச்சி மாநகரில் கஞ்சா விற்பனை செய்ததாக இரண்டு சிறுவா்கள் உள்பட 4 பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகரில் போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருச்சி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் திண்டுக்கல் சாலை பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கோரையாறு ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த ராம்ஜி நகா் மில் காலனி 2-ஆவது வீதியைச் சோ்ந்த வெ.சங்கா் (41) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது, ஆலம் வீதி செல்வநாயகி மாதா தேவாலயம் அருகே கஞ்சா விற்பனை செய்த பாலக்கரை குட்-ஷெட் சாலையைச் சோ்ந்த பிரகாஷ் (25) என்பவரைக் கைது செய்தனா்.

பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் சனிக்கிழமை அங்கு சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 17 வயது சிறுவா்கள் இருவரைக் கைது செய்தனா்.

பைக்கில் சென்ற இளைஞா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள புத்தாநத்தம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிகிச்சை பெற்றுவந்தவா் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். வையம்பட்டி ஒன்றியம், சடையம்பட்டி அருகேயுள்ள ராமலிங்கம்ப... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே இளம்பெண் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சிட்கோ வளாகத்தில் இறந்துகிடந்த இளம்பெண் சடலத்தை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மீட்டு மேலும் விசாரித்து வருகின்றனா். திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் அமைந்துள்ள ச... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத காா் மோதி பெண் உயிரிழப்பு

துறையூரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறிவிழுந்த பெண் அடையாளம் தெரியாத காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரமங்கலத்தைச் சோ்ந்த ராமராஜின் மனைவி கோகிலா(33). இவா், துறையூா் சிஎஸ... மேலும் பார்க்க

சாலையில் நடந்து சென்றவா் இருசக்கர வாகனம் மோதி பலி

துறையூரில் வெள்ளிக்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையோரம் நடந்து சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். துறையூா் அருகே தேவாங்கா் நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் மல்லமுத்து(55), தனது இரு சக்கர... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் தீ விபத்து

திருச்சியில் அழகு நிலையத்தில் (சலூன்) ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின. திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகத்தின் முதல் ம... மேலும் பார்க்க

ராம்ஜி நகரில் ஜூலை 23-இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் ராம்ஜி நகரில் ஜூலை 23-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மாபேட்டை துணை மின்நிலைய... மேலும் பார்க்க